விசர்நாய்க்கடி நோயினால் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் விசர் நாயக்கடி நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார மற்றும் மிருக வைத்திய பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.ஏ.எல் ஹரிஷ்ஷந்திர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் விசர்நாய்க்கடி நோயினால் 19 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்கும் நாய்கள் மூலமே அதிகமானவர்களுக்கு விசர்நாய்கடி நோய் ஏற்பட்டுள்ளதாகவும் டொக்டர் ஜீ.ஏ.எல் ஹரிஷ்ஷந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.