
நாட்டில் ஏற்பட்ட கொரோனா அசாதாரண நிலைமை தொடர்ந்து பாடசாலைகளை 23.11.2020 நாளை மீள ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது.
இதற்கு அமைய பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக முன்னேற்பாடு கலந்துரையாடல் கூட்டம் ஒன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி-தேசிய
பாடசாலையில் இன்று 22.11.2020 திகதி பாடசாலை அதிபர் செ.ரவீஸ்கரன் தலைமையில் பாடசாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ.இரவீந்திரன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் குணபாலசிங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!