Contact Form

Name

Email *

Message *

விநாயகபுர கிராம விவசாயிகளுக்கு இலவச விதை நெல் விநியோகம்

எதிர்காலத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை நெல்லையும் தங்கள் வயலில் ஒரு பகுதியில் உற்பத்தி செய்து கொள்வதில் கவனம் செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அம்பாறை மாவட…

Image

எதிர்காலத்தில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை நெல்லையும் தங்கள் வயலில் ஒரு பகுதியில் உற்பத்தி செய்து கொள்வதில் கவனம் செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கை பெருமளவு விஸ்தரிப்பும் அடையும் என்பதைஒவ்வொரு விவசாயியும் சிந்தனையில் கொண்டு செயற்பட வேண்டும்.

இவ்வாறு திருக்கோவில் பிரதேசத்திலுள்ள விநாயகபுர கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 விவசாயிகளுக்கு தலா இரண்டு புசல் விதை நெல்லை கிறிஸ்டியன் எய்ட் நிறுவனத்தின் நிதி உதவியில் சேவாலங்கா அமைப்பு வழங்கும் வைபவத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையில் சேவா லங்கா அமைப்பினர் மாவட்ட திட்ட இணைப்பாளர் எஸ்.ஏ.றொபின் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்; இந்த மாவட்டத்தில் ஏழை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு எதிர்காலத்தில் தேவையான விதை நெல்லினங்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்வதற்கான பல நடவடிக்கைகளை சேவா லங்கா அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இதன் முதல் கட்டம்தான் இந்த இலவச விதைநெல் வழங்கும் வேலைத்திட்டமாகும். இதே போன்று சம்மாந்துறைப் பிரதேசத்திலும் 100 ஏழை விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு இரண்டு புசல் விதைநெல் வீதம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

திருக்கோவில் பிரதேச கமத்தொழில் சேவை நிலையப் பணிப்பாளர் எஸ்.சிதம்பரநாதன் பேசுகையில்; இன்று வழங்கப்படும் இந்த இலவச விதை நெல்லை தவறான வழிகளில் இல்லாது சிறந்த முறையில் பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யுங்கள். இந்தப் பிரதேசத்தில் 14504 ஏக்கர் வயல் நிலங்கள் இருந்தபோதும் 10615 ஏக்கர் நிலத்தில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதையும் எதிர்காலத்தில் அதிகரித்து மேட்டு நிலப்பயிர்ச் செய்கையிலும் கவனம் செலுத்துங்கள் என்றார்.

மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.லத்தீப் பேசுகையில்: ஏழை விவசாயிகளுக்கு சேவாலங்கா அமைப்பு செய்யும் இந்த விதை நெல் உதவி மிகவும் முக்கியமானது என்பதை விவசாயிகள் உணர்ந்து செயற்பட வேண்டும். மாவட்டத்தின் கரையோரப் பிரதேச விவசாயிகளுக்கு வேண்டிய ஆலோசனைகளும் வழங்குவதற்கு நான் முழுநேரமும் செயற்படவிருக்கிறேன் என்றார். மாகாணசபை உறுப்பினர் எஸ்.செல்வராஜா, திருக்கோவில் பிரதேச உதவி திட்டமிடல் அதிகாரி எஸ்.நவிதரன் ஆகியோரும் பேசினார்கள்

You may like these posts

Comments