இவ்வாறு திருக்கோவிலில் நடைபெற்ற விசேட மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோம நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமரும் புத்தசாசன சமயவிவகார கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்தராஜபக்ச விடுத்தவேண்டுகோளுக்கமைவாக இலங்கைத்திருநாட்டின் மக்கள் கொரோனாத் தாக்கத்திலிருந்து மீள்வதற்கும் நாட்டைவிட்டு கொரோனா ஒழியவும் அருளாசிவேண்டி இன்று(9) திங்கட்கிழமை காலை திருக்கோவிலில் விசேட மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமமும் பிரார்த்தனையும் பூஜையும் இடம்பெற்றது.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்றுகாலை 5.30மணிக்கு திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலயுதசுவாமி ஆலயத்தில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்திற்கான கிரியைகள் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆரம்பமாகி 8மணியளவில் நிறைவுற்றது. ஆலயகுரு சிவஸ்ரீ நீதி.அங்குசநாதக்குருக்கள் உதவியாகவிருந்தார்.
நிகழ்வில் ஆலயத்தலைவர் சு.சுரேஸ், வண்ணக்கர் வ.ஜயந்தன், செயலாளர் எ.செல்வராஜா மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள், பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன், உதவிச்செயலாளர் க.சதீசேகரன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் சுகாதாரவிதிப்படி கலந்துகொண்டார்கள்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் பிரதமரால் விடுக்கப்பட்டிருந்தது.
இத்தகைய பிரார்த்தனைகளை அனைத்து இனமக்களும் இணைந்து செய்யும்போது நிச்சயம் இறைவன் இக்கொடிய கொரோனாவை நாட்டில் மட்டுமல்ல உலகத்திலிருந்தே ஒழிப்பார். இது இறை நம்பிக்கை. என்றார்.
ஹோமம் செய்த பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் அருளுரையாற்றுகையில்,
"வேதங்களிலுள்ள இம்மந்திரம் கொடிய நோய்களை தூரவிலக்குவதோடு மரண பயத்திலிருந்து விடுபடவும் உதவும். இந்த யாகத்தின்போது பலவகையான மூலிகைகள் மருந்துகள் ஆகுதிசெய்யப்படுகின்றன. இதில் வரும் புகையானது பலவித நோய்களை தீர்க்கவல்லது. இத்தகைய யாகத்தால் கிராமமக்கள் நோய்நொடியின்றி பயபீதியின்றி நிம்மதியாக வாழவழிவகுக்கும். நாட்டின் சகல இனமக்களுக்கும் நன்மைபயக்கும். ஆறுதலையும் நிம்மதியையும் தரும்." என்றார்.
இங்கு நடைபெற்ற விசேட ஹோமம் பிரார்த்தனை வழிபாடுகள் இன்று காலை 6.30 மணிமுதல் 7 மணிவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவை 'ஆலய தரிசனம்' நிகழ்ச்சியில் நேரடிஒலிபரப்புச் செய்யப்பட்டது. திருக்கோவிலிலிருந்து இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன பிராந்தியச் செய்தியாளர் வி.ரி.சகாதேவராஜா இந்நிகழ்ச்சியை நேரடியாக அஞ்சல் செய்தார்.
மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி அனைவருக்கும் நன்றிகூறினார்.
இதேபோன்ற மகா யாக நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி உகந்தமலை முருகனாலயத்தில் நடைபெறவிருக்கின்றது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!