Contact Form

Name

Email *

Message *

தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள்

Image

நாட்டில் தற்போது கொவிட் - 19 பரவும் சூழ்நிலையில் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளியை பின்வரும் சுகாதார நடைமுறைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றி கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு இந்து மத சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறது.

• தீபாவளி பண்டிகையின் போது நல்ல மனநிலையை பேணுவதற்கும், பண்டிகை கொண்டாடத்தின் போது எந்தவொரு இந்து மக்களும்; வைரஸ் தொற்றுக்கு ஆலாகாமல் இருத்தல் வேண்டும்.

• மக்கள் ஒன்றுகூடாமல் தற்போதுள்ள இடங்களிலேயே தீபாளியை கொண்டாடுங்கள். கொழும்பு, கம்பஹா, களுத்துறை போன்ற அதி அவதானத்திற்குரிய பிரதேசங்களில் இருந்து உங்கள் ஊரில் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு நோய் பரவுவதை தடுத்தல் வேண்டும்.

• தூர பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே தீபாவளியை கொண்டாட வேண்டும்.

• குடும்ப உறுப்பினர்களுக்கு, நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

• கோயில்களில், சமூகத்தில் அல்லது தோட்டப்புறங்களில் மத கொண்டாட்டங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

• உடனே தீப்பற்றக்கூடிய சிறிதளவு அற்ககோல் அடங்கிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு ஒளி விளக்குகளை ஓளிரச்செய்வதை தவிர்க்கவும். மத செயற்பாடுகளுக்கு முன்னரும் பின்னரும் சவர்க்காரமிட்டு கைகளை கழுவவும்.

• கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்து 'ஆயுபோவன்  வணக்கம்' கூறி அல்லது வேறு வழியில் வாழ்த்துவது பொருத்தமானதாகும்.

• இந்த பண்டிகையின் போது மதுபானம் மற்றும் புகையிலை பாவிப்பதை தவிர்க்கவும்.

இந்த தீபாவளி பண்டிகையின் போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி கோவிட் - 19 பரவுவதை தடுப்பதற்கு உதவுமாறும், பொறுப்புடன் பாதுகாப்பாக செயற்பட்டு இந்த தீபாவளி பண்டிகையை ஒரு புது வழிமுறையில் கொண்டாடுவோம்! என சுகாதார அமைச்சு கூறுகிறது.

You may like these posts

Comments