Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவிலில் தாதிய உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

Image


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பிலுவிலில் தாதியர் உத்தியோகத்தரின் சடலம் இன்று மீட்க்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை வைத்தியாசலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தப்போடி பிரணவநாதன் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .

நேற்று மாலை தனது தென்னம் தோட்ட காணிக்கு சென்றுள்ள குறித்த நபர் இரவு வீடு திரும்பாத நிலையில் வீட்டார் அவரை தேடி சென்ற வேளை தோட்ட காணியில் உள்ள சிறிய நீர் தேங்கிய மடு ஒன்றினுள் சடலமாக மீட்க்கப்பட்டார்

மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருகிறது.

மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts

Comments