பாட்டன், தந்தை விட்டுச்சென்ற இடத்திலிருந்து எனது தமிழ் மக்களுக்கான பணிகளை தொடரவுள்ளேன் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு சந்திரகாந்ன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் கடந்த யுத்தகால வடுக்களிலிருந்து இன்னும் மீண்டு கொள்ளவில்லை. அவர்களின் கல்வி, கலாசாரம், சுகாதாரம், வாழ்வாதாரம் உட்கட்டமைப்பு என அத்தனை விடயங்களும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.
மேலும் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களுக்கு இதுவரையில் எந்த தீர்வும் வழங்கப்படாத நிலையில் இவ்வாறான குற்றங்களைச் செய்தவர்கள் இந்த நல்லாட்சியிலும் சுதந்திரமாக உலாவுகின்றனர்.
எனவே எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை \சமர்ப்பித்துள்ளேன். போட்டியிடவுள்ள என்னை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யும் பொறுப்பு தமிழ்மக்களின் கைகளிலேயே உள்ளன.
தமிழ்மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள், அபிவிருத்திகள், வாழ்வாதார உதவிகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் வகையில் குற்றவாளிகளை கண்டறிவதற்கான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளேன்.
வாக்களிக்கும் விடயத்தில் இன்று தமிழ் மக்கள் நல்லதொரு நிலையில் காணப்படுகின்றனர். இருந்த போதும் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சகோதரர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று தமது வாக்குகளை அளித்து வாக்களிப்பு வீதத்தை அதிகரித்துக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் கடந்த யுத்தகால வடுக்களிலிருந்து இன்னும் மீண்டு கொள்ளவில்லை. அவர்களின் கல்வி, கலாசாரம், சுகாதாரம், வாழ்வாதாரம் உட்கட்டமைப்பு என அத்தனை விடயங்களும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.
மேலும் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களுக்கு இதுவரையில் எந்த தீர்வும் வழங்கப்படாத நிலையில் இவ்வாறான குற்றங்களைச் செய்தவர்கள் இந்த நல்லாட்சியிலும் சுதந்திரமாக உலாவுகின்றனர்.
எனவே எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்கான வேட்புமனுவை \சமர்ப்பித்துள்ளேன். போட்டியிடவுள்ள என்னை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யும் பொறுப்பு தமிழ்மக்களின் கைகளிலேயே உள்ளன.
தமிழ்மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள், அபிவிருத்திகள், வாழ்வாதார உதவிகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் வகையில் குற்றவாளிகளை கண்டறிவதற்கான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளேன்.
வாக்களிக்கும் விடயத்தில் இன்று தமிழ் மக்கள் நல்லதொரு நிலையில் காணப்படுகின்றனர். இருந்த போதும் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சகோதரர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று தமது வாக்குகளை அளித்து வாக்களிப்பு வீதத்தை அதிகரித்துக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.