Contact Form

Name

Email *

Message *

நவராத்திரி நாளினிலே - By தம்பிலுவில் தயா

நவராத்திரி நாளினிலே  அம்மா தாயே உலக காப்பவளே  இம் மாதம் வரும் நவராத்திரி நாளிதிலே  மும மூன்று நாட்கள் என வகுத்து வந்து  முப் பெரும் தேவிகளாய் அருள்புரிபவளே  கல்வியில் சிறந…

Image

நவராத்திரி நாளினிலே 

அம்மா தாயே உலக காப்பவளே 
இம் மாதம் வரும் நவராத்திரி நாளிதிலே 
மும மூன்று நாட்கள் என வகுத்து வந்து 
முப் பெரும் தேவிகளாய் அருள்புரிபவளே 
கல்வியில் சிறந்தவர் யாரென்றும் 
கண்ணியத்தில் சிறந்தவர் யாரென்றும்
செல்வத்தில் மிகுந்தவர் எவரேன்றும்
வீரத்தில் உயர்ந்தவர் யாரென்றும்
வீண்வம்பை சுமத்துபவர் யாரென்றும் அன்பு
செல்லாத இவ்வுலகில் உள்ளோர்க்கு
செய்திடு திறமை காண் பரீட்சைதனை


 பண்போ டொழுக்கம பறந்தோடிப் போயிற்றெங்கோ
பார்வதியே இப் பாரைப் பாரது மீண்டு வர
உன்னிடத்தில் இல்லாத பொன் பொருளால்
உன்னையே விலை கொடுத்து வாங்கிடுவர்
பொன் விளையும் பூமியிலே இன்னுமிங்கு
போகவில்லை வறுமை மிகு அகதி நிலை
அன்பென்ற விலையிலா பொருளுமிங்கு
அடியோடு மறைந்து வெகு நாளாச்சு

இவ் இனிய நவராத்திரி நாளிதிலே நீ
இருந்து கொலு வீற்றிருக்கும் போதினிலே உன்
கண்ணிலே காணுகின்ற அவலங்களை நாங்களினி
காணாமல் செய்திடுவாய் சக்தி தாயே

-------------தம்பிலுவில் தயா
நன்றி - mailed by Parthipan ( G.S)    

People Of Thambiluvil & Thirukkovil       ---   sent your article to us - thambiluvil@gmail.com

You may like these posts

Comments