Contact Form

Name

Email *

Message *

சங்கடங்கள் தீர்ப்பவா

கந்தசஷ்டி நாயகா... கணபதி சகோதரா...கந்த பாணதுறை அமர்ந்தவா.. காத்திடுவாய் வேலவா பத்மா சூரனையே கொன்றவா... சுத்தத் தேவர்களை காத்தவா... தெய்வயானையினை கொண்டவா -தமிழ் தெய்வமாக நி…

Image
கந்தசஷ்டி நாயகா...
கணபதி சகோதரா...கந்த
பாணதுறை அமர்ந்தவா..
காத்திடுவாய் வேலவா

பத்மா சூரனையே கொன்றவா...
சுத்தத் தேவர்களை காத்தவா...
தெய்வயானையினை கொண்டவா -தமிழ்
தெய்வமாக நின்றவா....

திருக்கோவில் என்னும் ஊரிலே...
அருளாட்சிதனை செய்பவா..
வெள்ளை குதிரைமீது இருந்துதான் -மனம்
கொள்ளை கொண்டு செல்பவா...

வங்கக் கடல் ஓரத்தில்
வந்துகுடி கொண்டவா...
சஷ்டிதனை நோக்கிட....பக்தர்
சங்கடங்கள் தீர்ப்பவா ...

You may like these posts