Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரிப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரிப்பு திருக்கோவில் பிரதேசத்தின் விநாயகபுரத்தில் 03.12.2020 நேற்றையதினம் இரவு மேலும் இருவர் கொரோனா தொற்றாள…

Image
திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரிப்பு



திருக்கோவில் பிரதேசத்தின் விநாயகபுரத்தில் 03.12.2020 நேற்றையதினம் இரவு மேலும் இருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டிருந்தனர். இத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.

விநாயகபுரம் பிரதேசத்தினை சேர்ந்த தனிமைப்படுத்தலில் இருந்த வர்த்தகர் ஒருவருக்கே நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது, நேற்று இரவு வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் அவருடன் தொடர்புடைய மேலும் இருவருக்கு கோரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 11.11.2020 அன்று முதலாவது தொற்றாளரும், 29.11.2020 திகதி ஒரு தொற்றாளரும், 30.11.2020 திகதி மேலும் இரண்டு பேரும், 02.12.2020 நேற்றைய தினம் சங்கமன்கண்டி ஒரு தொற்றாளரும், 03.12.2020 நேற்றைய தினம் மூன்று பேர் இனங்கானப்பட்டுள்ளனர்.

இத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில் இங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.

You may like these posts

Comments