Contact Form

Name

Email *

Message *

விநாயகபுரத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன் கைது . மர்ம மனிதன் தாக்கியதாக வதந்தி

News From Website- திருக்கோவிலில்  கத்தியால் வெட்டிய சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது. இதில் படுகாயமடைந்த பெண்ணை  வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வெட்ட…

Image
News From Website- திருக்கோவிலில்  கத்தியால் வெட்டிய சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.
இதில் படுகாயமடைந்த பெண்ணை  வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வெட்டிய நபரை  கத்தியுடன் கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி. சமிந்த ஜெயசூரிய தெரிவித்தார். இது தொடர்பாக தெரியவருவதாவது:

விநாயகபுரம்   சின்னத்தோட்டத்த்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது அப்போது பெண்  கூச்சலிட்டதையடுத்து மர்மமனிதன் தாக்கிவிட்டான் என பொதுமக்கள் சுற்றிவளைத்து ஓடி குத்திய நபரை பிடித்துள்ளனர். படுகாயமடைந்த பெண்ணை திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கத்தியால் வெட்டிய நபரை கத்தியுடன் கைது செயதுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

இதேவேளை இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் மர்மமனிதன் தாக்கிவிட்டான் என சிறிது நேரம் பீதி ஏற்பட்டு உண்மை நிலையையறிந்ததும் அமைதி ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். n

You may like these posts