வீதிகளில் ரயர் எரித்தும் மற்றும் பொலிஸ் நிலைய செயற்பாடுகளுக்கும் சூழல் அமைதிக்கு பங்கம் விழைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் இருவர் உட்பட 9 பேரை திருக்கோவில் பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று மர்மமனிதர்களை பொதுமக்கள் பிடித்து போது பொலிஸார் அவர்களை மீட்டு கைது செய்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பையடுத்து பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து வீதிகளில் ரயர்கள் எரித்து ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்களான அமிர்தலிங்கம், சந்திரகுமார் மற்றும் சம்பவத்தின் போது துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய பரணீதரன் உட்பட 9 பேரை பொலிஸார் இன்று காலையில் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று மர்மமனிதர்களை பொதுமக்கள் பிடித்து போது பொலிஸார் அவர்களை மீட்டு கைது செய்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பையடுத்து பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து வீதிகளில் ரயர்கள் எரித்து ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்களான அமிர்தலிங்கம், சந்திரகுமார் மற்றும் சம்பவத்தின் போது துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய பரணீதரன் உட்பட 9 பேரை பொலிஸார் இன்று காலையில் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!