Contact Form

Name

Email *

Message *

தங்கவேலாயுதபுரத்தில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் 100 ஏக்கர் மரவள்ளிச் செய்கை ஆரம்பித்து வைப்பு

(ASK ) உலக வங்கியின் நிதியுதவியுடன் விவசாய அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் விவசாய நவீனமாக்கல் திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்துடன் இணைந்து அரசின் உள்…

Image

(ASK )

உலக வங்கியின் நிதியுதவியுடன் விவசாய அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் விவசாய நவீனமாக்கல் திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்துடன் இணைந்து அரசின் உள்நாட்டு விவசாய உற்பத்திகளை மேம்படுத்தும் வகையில் திருக்கோவில் பிரதேசத்தின் தங்கவேலாயுதபுரம் மீள்குடியேற்ற கிராமத்தில் நூறு ஏக்கரில் மரவள்ளிச் செய்கை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வுகள் தங்கவேலாயுதபுரம் மீள்குடியேற்ற கிராமத்தில் கிழக்கு மாகாண விவசாய திட்டப் பிரதிப் பணிப்பாளர் தயாரத்ன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றது.

இதன்போது தங்கவேலாயுதபுரம் சந்தியில் திட்டத்திற்கான உற்பத்தி கொத்தணிக் கிராமங்கள் எனும் பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பூமி புஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சம்பிரதாய ரீதியாக அதிதிகளால் மரவள்ளத் தடிகள் நடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மரவள்ளிச் செய்கையாளர்களுக்கான மரவள்ளி தடிகள் மற்றும் மரவள்ளிப் பயிருடன் ஊடுறுப் பயிர் செய்கைக்கான சிவப்பு கௌப்பி விதைகளும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டு இருந்ததுடன் விவசாயிகளால் விவசாய நவீன மயமாக்கல் திட்டப் பணிப்பாளர் கலாநிதி ரோகான் விஜயகோனுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்து இருந்தனர்.

இத்திட்டத்தின் ஊடாக நவீன இயந்திரங்கள் மற்றும் விவசாய உள்ளீடுகள் அனைத்தும் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புக்களும் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது

அதேவேளை விவசாய பாரம்பரிய முறையில் இருந்து நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்து விவசாய உற்பத்திகளை மேலோங்க செய்வதுடன் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடையச் செய்வதே இத் திட்டத்தின் பிரதான நோக்கமென திட்டப் பணிப்பாளர் கலாநிதி ரோகான் விஜயகோன் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய நவீன மயமாக்கல் திட்டப் பணிப்பாளர் கலாநிதி ரோகான் விஜயகோன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், கிழக்கு மாகாண திட்ட பிரதிப் பணிப்பாளர் பி.எம்.என்.தயாரத்ன, அம்பாறை மாவட்ட விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி. டிசாநாயக்க, கிழக்கு மாகாண விவசாய நவீன திட்ட மயமாக்கல் அதிகாரிகளான ஏ.அருள்நந்தி, எம்.ராதிகா, ரதி, திருக்கோவில் விவசாய போதனாசிரியர் எஸ்.சித்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




You may like these posts