திருக்கோவில் முருகன் ஆலயத்திற்கு முன்பாக கடல் நீர் 150 மீற்றர் வந்ததுடன் மீனவர்களின் வலைகள் தோணிகள் சேதம் வீடுகளுக்குள்ளும் நீர் வீட்டு தோட்டமும் நாசம்
திருக்கோவில் பிரதேசத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் சுமார் 150 மீற்றர் தூரம் வரை ஊரை நோக்கி வந்துள்ளதுடன் ஆழ்கடல் மீனவர்களின் வலைகள் தோணிகள் சேசதடைந்துள்ளதுடன் அருகாமையில் இருந்த குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ள அதேவேளை வீட்டு தோட்டமும் நாசமாகியுள்ளன.
திருக்கோவில் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிமை இரவு (17) திடீரென ஏற்பட்ட கடலை சீற்றம் காரணமாக பாரிய சத்ததுடன் அலைகள் மேலெந்து கடல் நீர் வந்ததனால் இதனால் அப்பகுதியில் இருந்த குடும்பங்கள் சுனாமி பீதியில் இரவு முழுவதுமாக வீதிகளில் கடற்கரையைப் பார்த்து நிலையில் விழித்திருந்ததாகவும் தெரிவித்து இருந்தனர்.
இவ் கடலலை சீற்றம் காரணமாக ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கற்வேலிகளையும் தாண்டி பாரிய அலைகள் எழுந்து கடல் நீர் ஊருக்குள் உள்ள வந்தத நிலையில் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தோணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ள அதேவேளை வலைகள் கடலைகளால் இழுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்து இருந்ததுடன் கரையோர வீதி மற்றும் முருகன் ஆலய சூ10ழல் என்பன கடல் நீர் நிரம்பியுள்ளதுடன் கடற்கலையில் அமைக்கப்பட்டு இருந்த பொழுது போக்கு இடமும் நீர் நிரம்பியதுடன் இருக்கைகளும் சேதடைந்து காணப்பட்டன.
இவ் அனர்த்தம் காரணமாக மீனவர்களுக்கு இலட்சக் கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அரசாங்கத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் மீனவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இதேவேளை அருகாமையில் இருந்த குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் கடல் நீர் உள்ள புகுந்துள்ளதுடன் ஒருவரின் வீட்டுத் தோட்டமும் நாசமாகியுள்ள நிலையில் இவ் அனர்த்த நிலைமைகளை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோர் வருகைதந்து பார்வையிட்டு சேதவிபரங்களை அறிந்து கொண்டு இருந்ததுடன் ஊடகங்களுக்கு தவிசாளர் கருத்துக்களை தெரிவித்தும் இருந்தார்.