
நாளை 2018.11.23 திகதி பகவான் சத்யசாயி பாபா அவர்களின் 93வது ஜனனதினத்தினை முன்னிட்டு 2018.11.22 திகதி இன்று அதிகாலை ஊர்வல நிகழ்வானது இடம் பெற்றது. இவ் ஊர்வல நிகழ்வானது அதிகாலை 5.15 மணியளவில் ஓம்காரம் மற்றும் சுப்ரபாதத்துடன் ஆரம்பமாகி தம்பிலுவில், திருக்கோவில் பிரதான வீதி மற்றும் உள் வீதிகளின் ஊடகவும் இடம் பெற்றது.
இவ் ஊர்வலத்தினை தம்பிலுவில் சத்ய சாயி சேவா நிலையத்தினரும், திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையத்தினரும் இணைந்து நடாத்தினர். இவ் ஊர்வலத்தில் ஏராளமான சாயி பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!