Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல்

"எங்கள் பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு" தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல்.  நாட்டில் தற்போது …

Image

"எங்கள் பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு"

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல். 




நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலைகாரணமாக கோவிட் தடுப்பு பிரிவன் ஆலோசனைகளுக்கு அமைய பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது இதற்கு பூரண ஒத்துளைப்பினை வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

01. பொதுமக்கள் யாரும் ஆலயத்தின் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

02. பக்தர்கள் உரிய ஆச்சாரங்களையும் சமய நடைமுறைகளையும் வழமை போல பேணி அவர்களது வீட்டிலிருந்தவாறே இக் கொடிய நோயிலிருந்து அனைவரும் விடுபட அன்னையினை பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

03. இம்முறை ஆலயத்தினுள் எந்த நேர்த்திக் கடன், பூஜை பொருட்களே ஆலய நிர்வாகத்தினரினால் ஏற்றுக்கொள்ளப்டமாட்டாது.


04. இந்த நாட்களில் அங்கப் பிரதற்சனை எடுத்தல், கற்புர சட்டி எடுத்தல் என்பனவற்றிற்கு அனுமதி புரணமாக மறுக்கப்பட்டுள்ளது.


05. ஆலய வளாகம் மற்றும் அதனை சூழவுள்ள சூழலிலும் கடைகள் வைத்தல், ஒன்று கூடுதல், யாசகம் பெறுதல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.


06. எனவே இச் செயற்பாடுகளை மீறும் வகையில் நடந்து கொள்ளாமல் தவிர்க்குமாறும் மேலும் மீறி செயற்படுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


* எனவே சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சுகாதார அதிகாரி மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஆலோசனைகளுக்கும், மேற்பார்வைக்கும் பொதுமக்கள் தங்கள் பூரண ஒத்துழைப்பினை தந்துதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

"எங்கள் பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு"

கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள இந்த காலப்பகுதியில் கோவில் வழிபாடு மற்றும் இந்துமத கிரியைகளை செய்யும் போதும் சுகாதார நடைமுறைகளை முற்றாக பின்பற்றி நடந்து கொள்வோம்.




#Staysafe

You may like these posts

Comments