
பகவான் சத்யசாயி பாபா அவர்களின் 93வது ஜனனதினத்தினை முன்னிட்டு பகவானின் 93வது அவதார தின விழாவானது இன்று 23.11.2018 வெள்ளிக்கிழமை தம்பிலுவில் சத்ய சாயி சேவா நிலையம் மற்றும் திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையங்களில் வெகு விமர்சியாக இடம்பெற்றது. இவ்விழாவினை தம்பிலுவில் சாயி நிலைய தலைவர் K.புவனராசா மற்றும் திருக்கோவில் சாயி நிலைய தலைவர் திரு. பிரசாந் ஆகியோரின் தலைமையில் இரு சாயி நிலையங்களிலும் இடம்பெற்றது.
இதன் போது சுவாமிக்கு ஓம்காரம், வேத பாராயணம், பஜனை. ஆன்மீக சொற்பொழிவுகள், திருவூஞ்சல், மற்றும் மஹாமங்கள ஆராத்தி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்று விபூதி பிரசாதம் வழங்கலுடன் நிறைவுற்றது. இவ் விழாவில் ஏராளமான சாயி பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
தம்பிலுவில் சத்ய சாயி சேவா நிலையம் -
திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையம் -
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!