மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்!
அமரர். சீதாராம் ஜெயரூபன்.
(பிரதேச செயலாளர் –
கல்முனை தமிழ் பிரதேச செயலகம்)
(பிரதேச செயலாளர் –
கல்முனை தமிழ் பிரதேச செயலகம்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தில் பிறந்து, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக பதவி வகித்த ஓர் ஆளுமை மிக்க தமிழ் மகனும், இலங்கை நிருவாக சேவை (SLAS) அதிகாரியுமான திருவாளர். சீதாராம் ஜெயரூபன் அவர்களின் திடீர் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளோம்.
அமரத்துவமடைந்த எமது அன்பிற்குரிய பிரதேச செயலாளர் திருவாளர். சீதாராம் ஜெயரூபன் அவர்களின் பிரிவால் கலங்கி நிற்கும் அவரது குடும்பத்தார் மற்றும் துயரத்தில் தம்பிலுவில் மக்கள் சார்பாக நாங்களும் பங்கெடுத்துக் கொள்வதுடன், இறையடி சேர்ந்த அமரர். சீதாராம் ஜெயரூபன் அவர்களது நல் ஆத்மா கடவுளின் திருப்பாதங்களின் கீழ் நித்தியமாக இளைப்பாறவும், சாந்தி பெறவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!