Contact Form

Name

Email *

Message *

நுகர்வோர் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கு விசேட சோதனைப் பிரிவு

நுகர்வோர் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்காக புதிதாக விசேட சோதனைப் பிரிவொன்றை நியமித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Image
நுகர்வோர் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்காக புதிதாக விசேட சோதனைப் பிரிவொன்றை நியமித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


பிரதேச சுற்றிவளைப்பு பிரிவுகளுக்கு மேலதிகமாக இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஸ்மத் டீன் குறிப்பிட்டார்.
இந்த பிரிவிற்கென தனியான தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் எந்தவொரு இடத்திலும் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்த விசேட பிரிவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த புதிய பிரிவு இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You may like these posts

Comments