
[NR]
தம்பிலுவில் தம்பிமுத்து வீதியில் அமைந்துள்ள குருதேவர் பாலர்பாடசாலையில் 2017ஆம் ஆண்டின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது கடந்த 2017.02.09 வியாழன் தைப்பூச நன்நாளில் பாடசாலையின் முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக திருநாவுக்கரசு நாயனார் குருகுல செயலாளரும், குருதேவர் பாலர் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.பா.சந்திரேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். இன் நிகழ்வின் போது கடந்த வருடம் இப்பாடசாலையில் கல்வி கற்று இவ்வருடம் தரம் 1 ற்கு சென்ற மாணவர்கள் புதிய மாணவர்களை மாலைஅணிவித்து மலர்செண்டு கொடுத்து அன்பாக வரவேற்றனர். மேலும் இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!