
திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2017 யின் இறுதி நாள் நிகழ்வு 17.02.2017 வெள்ளிக்கிழமை நேற்றுமுன்தினம் பாடசாலையின் அதிபர் திரு.எம்.அன்ரன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது, இதில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் மற்றும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் பி.மோகனகாந்தன், மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் திரு.எஸ் ஜெயபாலன் மற்றும் தம்பிலுவில் சட்டத்தரணி திரு.எஸ்.ஜெகநாதன் மற்றும் திருக்கோவில் வலய பாடசாலை அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்க,ள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கடந்து கொண்டனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!