
திகோ/ தம்பட்டை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2017 யின் இறுதி நாள் நிகழ்வு 17.02.2017 வெள்ளிக்கிழமை நேற்றுமுன்தினம் பாடசாலையின் அதிபர் திரு.எம்.சிவானந்தா தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது, இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் டி.கலையரசன் அவர்களும் திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.S.நடேசன் மற்றும் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ். இராசமாணிக்கம், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் போலிஸ் பரிசோதகர் மற்றும் திருக்கோவில் வலய பாடசாலை அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்க,ள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கடந்து கொண்டனர்.



Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!