தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2017 யின் இறுதி நாள் நிகழ்வுகள் 2017.02.02 இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் திரு.வ.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு ஆர்.சுகிர்தராஜன், திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஆர் இராஜேந்திரா, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் பி.மோகனகாந்தன், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பு அதிகாரி திரு.எச்.எம்.ஹேரத் ஆகியோரும், மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் திரு.எஸ் ஜெயபாலன் விசேட அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்கள் திரு.வை.ஜெயசந்திரன், திரு.வி.குணாளன், திருமதி .ரி.இராஜசேகர், செல்வி என். வருனியா, திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக கணக்காளர் திரு.பி.ஹன்ஸ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மற்றும் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.தர்மபாலன், பொத்துவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.சோ.இரவீந்திரன், ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ். இராசமாணிக்கம் மற்றும் திருக்கோவில் வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், திருக்கோவில் வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், திருக்கோவில் கோட்ட பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் இதன் போது மேலும் பாடசாலை கல்வி சார் மற்றும் கல்விசாரா அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின் விளையாட்டுகள் மற்றும் அணிநடை, உடல்பயிற்சி கண்காட்சி போன்றனஇடம்பெற்றது. மேலும் 445புள்ளியை பெற்றும் இளங்கோ இல்லம் 1ம் இடத்தினையும், 414 புள்ளியை பெற்று கம்பர் இல்லம் 2ம் இடத்தினையும், 399புள்ளியை பெற்று வள்ளுவர் இல்லம் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இவ் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின் விளையாட்டுகள் மற்றும் அணிநடை, உடல்பயிற்சி கண்காட்சி போன்றனஇடம்பெற்றது. மேலும் 445புள்ளியை பெற்றும் இளங்கோ இல்லம் 1ம் இடத்தினையும், 414 புள்ளியை பெற்று கம்பர் இல்லம் 2ம் இடத்தினையும், 399புள்ளியை பெற்று வள்ளுவர் இல்லம் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.




























































































Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!