
தடையின் மறுபுறத்தினால் உள்ளுர் வீதிகள் வளியே தேரர் சிங்கள மக்களைத் திரட்டிக் கொண்டு கூக்குரல் மற்றும் கோஷம் இட்டு சென்றதினால் தமிழ் இளைஞர்களிடையே முறுகல் ஏற்பட்டு தமிழ் வாலிபர்கள் சிங்களவரைத் தாக்க முற்பட்டபோது பொலிசார் கலகத்தைப் பொலிசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
மீண்டும் வீதியின் பிரதான தடைக்கு சென்ற விகாராதிபதி தடையின் மேல் ஏறி ஒரு மதகுருவிற்று முற்றிலும் ஒவ்வாத நிலையில் வார்த்தைப் பிரையோகத்தைப் பாவித்து ஒட்டு மொத்த முழு பௌத்த துறவிகளையும் அவமானப்படுத்தியுள்ளார்.
இதனை அவதானித்த இளைஞர்கள் பொலிஸ ;நிலையத்தின்; எதிரில் ஒன்றுகூடி தேரரின் அடாவடித்தனத்தைக் கண்டித்து விகாராதிபதியைக் கைதுசெய்யும்படி கோஷமிட்டனர். போலிசாரினால் இளைஞர்களை சமரசப்படுத்த முயற்சித்தபோதும் அது முயற்சியளிக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், எஸ். வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரக்குமார், ஞா. கிருஷ்ணபிள்ளை, பொன் செல்வராசா, பா. அரியநேத்திரன், ஜேசுசபைத்துறவி அருட்தந்தை ஜோசப்மேரி ஆகியோர் கலந்து கொண்டு தேரரருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!