Contact Form

Name

Email *

Message *

5ஜி தொழில்நுட்பத்துடன் மீண்டும் களமிறங்கவுள்ள NOKIA

சில வருடங்களுக்கு முன் கைபேசி உலகை தன் வசம் ஆக்கிரமித்து வைத்திருந்தது நொக்கியா நிறுவனம்.

Image
சில வருடங்களுக்கு முன் கைபேசி உலகை தன் வசம் ஆக்கிரமித்து வைத்திருந்தது நொக்கியா நிறுவனம்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு 5ஜி தொழில்நுட்பத்துடன் 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் சந்தையில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கைபேசி உலகில் மைல்கல்லாக இருந்த நொக்கியா நிறுவனம் தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைபேசி வரை அறிமுகம் செய்தது.
அதன்பின் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து விண்டோஸ் மொடல் போன்களை வெளியிட்டது, அதன்பின், சந்தையில் காணாத நொக்கியா தற்போது அன்ட்ரொய்ட் இயங்குதளத்தில் 5ஜி தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்’ என்னும் வருடாந்த தொழில்நுட்ப விழாவில் புதிய மொபைல்கள் குறித்த அறிவிப்புகளை நொக்கியா வெளியிடவுள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக நொக்கியா எச்எம்டி குளோபல் என்ற புதிய தொழிநுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நொக்கியா வெளியிடவுள்ள ஸ்மார்ட் போனில் 5ஜி தொழில்நுட்பம், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி போன்றவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இரு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வகையில், 5.2 மற்றும் 5.5 இன்ச் அளவுடைய தொடுதிரையில், மெட்டாலிக் வடிவமைப்பில் ஐபி 68 என்னும் வாட்டர் ஃபுரூப் தரத்துடன் வடிவமைக்கப்படவுள்ளது.
இத்துடன் ஸ்னாப்ட்ராகன் 430 ப்ரோசசோர், 13 மெகாபிக்சல் திறனுள்ள பின்பக்க கமராவையும், 5 மெகாபிக்சல் முன்பக்க கமராவையும், 3 ஜிபி ரெம், 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதியும் கொண்டிருக்கும் என நொக்கியா தெரிவித்துள்ளது.

You may like these posts

Comments