Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலிலுள்ள வீடொன்றில் திருட்டு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியிலுள்ள மாடி வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (26) இரவு திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டின் கதவுகளை …

Image
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியிலுள்ள மாடி வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (26) இரவு திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அலுமாரிகளில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டிலுள்ளவர்கள் மரண வீடொன்றுக்காக மட்டக்களப்புக்குச் சென்றிருந்த வேளையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, இந்த வீட்டுக்கு அருகிலுள்ள திருக்கோவில் தபாலகத்தில் காணப்பட்ட அனைத்து அலுமாரிகளும் மேசைகளும்  உடைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் இன்று புதன்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You may like these posts

Comments