எமது ஊர்களின் கலைஞர்களையும்,படைப்பாளிகளையும்,உலகிற்கு அறிமுகம் செய்துவைத்து
அவர்களின் ஆற்றல்களையும்,அர்ப்பணிப்புகளையும்,படைப்புகளையும்,மக்களுடன் பகிர்ந்துகொண்டு
நமது ஊர்களுக்கு பெருமை சேர்ப்பதில் பெரும் பங்களிப்பை செய்கிறது எமது இணையத்தளம்.அந்த
வரிசையில் இம்முறை எமது ஊரின் மிக மூத்த கலைஞன் திரு.எஸ்.பி.கனகசபாபதி அவர்களை
அறிமுகம் செய்வதில் பெருமைகொள்கிறது.
மட்டுநகரின் தெற்கே 'ஊரென்றால் திருக்கோவில் ஊர் 'என வர்ணிக்கப்படும் பழந்தமிழ் கிராமத்தில்
நெய்தலும்,மருதமும் கொஞ்சிவிளையாடும் சித்திரவேலனின் கோவிலிருக்கும் மண்ணில்,கள்வடியும்
ஊராம் களுதாவளையின் அடியினைக்கொண்ட பூபாலகோத்திர,பூபாலபிள்ளை அவர்களுக்கும்,
சுந்தரம்மாவிற்கும் மகானகப் பிறந்தார் கனகசபாபதி.கல்கிதாசன் என்பது புனைபெயர்'கனக்ஸ்'என்பது
கனடாப் பெயர்.
ஆரம்பகாலக் கல்வியை திருக்கோவில் மெதொடிஷ்த மிஷன்,தம்பிலுவில் மகாவித்தியாலயம் ஆகியவற்றிலும்,
கல்லூரிக் கல்வியை மட்/கல்லடி சிவாநந்த வித்தியாலயத்திலும் பெற்றார்.சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த
முதலாவது தங்கப்பதக்கத்தையும்,புலமைப் பரிசினையும் பெற்றார்.தொடர்ந்து சுவாமி விபுலாநந்தரின்
மருகனான சுவாமி நடராஜானந்தாஜியின் குருகுல வாழ்விலும் பயிற்சி பெற்றார்.மட்டக்களப்பின் பிரபல
தமிழ் பண்டிதர்களுடன் பழகும் வாய்ப்புக்கொண்டதுடன் பண்டிதர் வித்வான் வீ.சீ.கந்தையா அவர்களின்
முதல்தர மாணவனாக இருந்து தமிழ் கற்கும் வாய்ப்பினையும் பெற்றார்.அதேவேளை சமஸ்கிருதத்திலும்
ஈடுபாடுகொண்டு அதை சிவஸ்ரீ பூரண தியாகராஜ குருக்கள் அவர்களிடம் முறையாக பயின்றார்.இவரது
ஆங்கிலக் கல்விக்கு அத்திவாரமிட்டவர்கள் திரு.எஸ்.எம்.லீனா,திரு.யோகம் வேலுப்பிளை,திருஏ.ஈகனகரத்தினா
ஆகியோராகும்.
திருக்கோவில் கிராமத்தின் முதலாவது சிறப்புக் கலைப் பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்திலும்,
பேராதனை பல்கலைக்கழகத்திலும் தனது பட்டப் படிப்பினைப் பெற்றவர்.பேராசிரியர் சதாசிவம்,கலாநிதி கைலாசபிள்ளை
பேராசிரியர்கள் குலரத்தினம், வித்தியானந்தன்,ஜோர்ஜ் தம்பாபிள்ளை கைலாசநாத குருக்கள் ஆகியோரிடம் பயிலும்
பாக்கியம் பெற்றவர்
தமிழ்மொழி மீதும்,தமிழ்கலை,இலக்கியம்,கலைஞர்கள் மீதும் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் இயல்பாகவே
தாயக மண்ணின் தமிழ் கருவூலங்களாம் நாட்டார் பாடல்களிலும்,நாட்டுக் கூத்துகளிலும்,கருத்தையும்,கவனத்தையும்
கொண்டார்.இவரது 'கிராமத்து இலக்கியத்தில் நாட்டுப்பாடல்கள்'என்ற கட்டுரை 1966ல் மட்/சனசமூக நிலைய
கலைவிழாவின் சிறப்பு வெளியீடான 'கதிரொளி"என்ற மலரில் வெளிவந்தது.இந்த கலைவிழா அமைப்பாளர்கள்
மலர்குழு வரிசையில் திருவாளர்கள்,ச.கணேசன்,மு.ஆனந்தராஜா,டாக்டர் ம.பரசுராமன்,வித்வான் வி.சீ.கந்தையா
திருவாளர்கள் கா.நடராஜா,ஜே.எல்.திசவீரசிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இக் கட்டுரையின் இறுதியில்
"கிராமிய இலக்கியச் செல்வங்களை பாதுகாக்குமாறு"ஆக்கபூர்வமான வேண்டுகோளை திரு.கனக்ஸ் அவர்கள்
விடுத்திருந்தமை நோக்கத்தக்கது.
பன்மொழிப் புலமையும்,எழுத்தாற்றலும்,கவித்துவமும்,முகாமைத்துவமும் நிறைந்த இவர் மட்டு/காரேறு மூதூர்
காரைதீவுக் கிராமத்தில் உதித்த முத்தமிழ் வித்தகரும்,உலகின் முதல் தமிழ்பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தர்
பரம்பரையில் வந்த முருகப்பர் வீரக்குட்டி அவர்களதும்,திருக்கோவில் ஏகாம்பரம் அருளம்மா அவர்களதும் புத்திரி
கலாமணியை மணந்து கோபிவிநோபா,பகவத்கீதா,தேவிமனோகர் ஆகிய பிள்ளைகளுக்கு தந்தையானார்.
இவர் கொழும்பு,கண்டி,பேராதனை,கல்முனை,அம்பாறை,வாழைச்சேனை,மட்டக்களப்பு முதலான இடங்களில்
வசித்து கடமைபார்த்தபின்பு,இந்தியா ,ஈரான்,ஜேர்மனி முதலான இடங்களிலும் வாழ்ந்து தற்சமயம் குடும்பத்துடன்
கனடாவில் வசித்து வருகிறார்.
இலங்கையில் இருக்கும்போது அரச எழுதுவினைஞர் சங்க செயற்குழு உறுப்பினராகவும்,கல்முனை கிளை
அமைப்பாளராகவும்,செயலாளராகவும்,திருக்கோவில் திருஞானவாணி முத்தமிழ் மன்ற செயலாளராகவும்
உதயசூரியன் கலாமன்ற அமைப்பாளர்களில் ஒருவராகவும்,பேராதனை கமத்தொழில் திணைக்களத்தின்
தமிழ் இலக்கிய மன்ற அமைப்பாளர்களில் ஒருவராகவும்,படிப்பாக பொறுப்பாளராகவும் இருந்து தமிழுக்கு
தன்னால் முடிந்த சேவையினை ஆற்றியுள்ளார்.1960 முதல் பத்திரிகைகளிலும்,சஞ்சிகைகளிலும் எழுத
தொடங்கினார்.உள்ளதை யாருக்கும் அஞ்சாமலும் எழுதுவதும்,பேசுவதும் இவரது குணாம்சமாகும்.
கனடாவில் மொன்றியலில் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழ் ஒன்றியத்தின் துணைத் தலைவராக இருந்ததுடன்
"தமிழ் எழில்"என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இருந்தவர்."தமிழ் எழில்"தான் கனடாவில் முதல்
வெளிவந்த தமிழ் இதழாகும்.தொடர்ந்து கனடா தமிழ் கலாச்சாரசங்கத்தின் தலைவராகவும்,உலகத் தமிழ்
பண்பாட்டியக்க கியூபெக் கிளையின் தலைவராகவும்,மட்/சிவானந்த வித்தியாலய வடஅமெரிக்க கிளையின்
செயலாளராகவும்,தமிழ் நாடு பெருங்கவிக்கோ டாக்டர் வா.மு.சேதுராமன் நிறுவிய பன்னாட்டு தமிழுறவு
மன்ற கியுபெக் மாநில அமைப்பாளராகவும்,மட்டக்களப்பு பாடும் மீன்களின் அமைப்பாளர்களில் ஒருவராகவுமிருந்து
கடல்கடந்த தேமதுரத் தமிழுக்கும்,தமிழர்க்கும் துணை போந்தார்.
1970ல் அழகிய "திருஞானவாணியும்"1976 ல் "அறப்போர் அரியநாயகமும்"இவரது ஆரம்பகால படைப்புகளாகும்.
அப்போதிருந்தே "நித்தமும் உழைப்போம் முத்தமிழ் காப்போம்"என்ற தனது எண்ணத்தில் எழுந்த சேவை
தமிழுக்கு தேவை என உணர்ந்து செயட்படட் தொடங்கினார்.அதனால் வீரகேசரி,தினகரன்,சுதந்திரன்,எழுச்சி,
செந்தாமரை,மஞ்சரி,தாயகம்,தமிழ்பணி முதலான பத்திரிகை,சஞ்சிகைகளில் எழுதலானார்.
கவிஞர் காசி ஆனந்தனின் நெருங்கிய நண்பராக இருக்கும் திரு.கனக்ஸ் அவர்கள் காசியின் சில கொள்கைகளில்
உடன்பாடில்லாதவர்.இருப்பினும் நீண்ட கால நண்பர்கள்.ஒரே திணைக்களத்தில் கொழுப்பில் பணி புரிந்தவர்கள்.
1995ல் அமெரிக்காவின்"National Library of poetry" வெளியிட்ட "THE PATH NOT TAKEN"என்ற ஆங்கில
கவிதைக் களஞ்சியத்தில் இவர் எழுதிய "SINKING DREAM"என்ற அருமையான கவிதை இவரின் ஆங்கிலப் புலமைக்கு
ஓர் எடுத்துக்காட்டு."கல்கிதாசன் கவிதைகள்",தேரோடும் திருக்கோவில்"என்ற நூல்கள் மூலம் இவரது தமிழ்
கவிதைப் புலமையும்,எழுத்துத் திறமையும் புலனாவதை காணலாம்.அத்தோடு கலாநிதி கே.டி.செல்வராஜகோபால்
(ஈழத்துப் பூராடனார்)அவர்களுடன் இணைந்து "மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள்"
என்ற வரலாற்று நூலை தொகுத்து அதனை தன் சொந்த செலவிலே சென்னை மித்ரபதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார்.
இதன் இரண்டாம் பாகமும் வெளிவரவுள்ளது.
நாட்டுக் கூத்தில் நாட்டம் கொண்டவராகையால் மட்டக்களப்பின் வடமோடி நாட்டுக் கூத்தை கனடாவில் முதன் முறையாக
மொன்றியலிலும்,பின்னர் ஒட்டாவா பல்கலைக்கழகத்திலும் ஆடி அரங்கேற்றிய பெருமை உடையவர்.
மறைந்த ஈழத்துப் பூராடனாரை ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே நினைக்கும் இவர் முத்தமிழ் வித்தகருக்குப் பின்
பூராடனார் ஒருவரே முத்தமிழுக்கு முடிசூட்ட தகுதி பெற்றவர் என்று கூறிவந்தவர்.
கனேடிய தமிழ் வானொலி நிறுவனர் திரு.சிவசோதி (இளைய பாரதி)அவர்கள் அன்பு அறிவிப்பாளர் பி.எச்அப்துல் ஹமீத்
அவர்களை டொராண்டோவுக்கு அழைத்த நேரம் அவருடன் தொடர்பு கொண்டு மொன்றியலில் அப்துல் ஹமீத் அவர்களுக்கு
மாபெரும் தமிழ் கலைஞன் என்ற வகையில் பலரின் எதிர்புகளுக்குமத்தியில் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் ஒரு
மகத்தான பாராட்டு விழாவை நடத்திய பெருமையும் கனக்ஸ் அவர்களுக்கு உண்டு.அதேபோல் பேராசிரியர் கா.சிவத்தம்பி
டைரக்டர் பாரதிராஜா,டாக்டர் ஜனார்த்தனன்,மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன்,பாடகர் தீபன் சக்கரவர்த்தி முதலான
பிரமுகர்களையும் மொன்றியல் வாழ் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.கனடா தமிழ்கலாச்சார சங்க தலைவராக
இருந்த வேளையில் இவரது வலது கரம்போல் செயல்பட்ட அளவெட்டி சிறீசுக்கந்தராசாவின் துணை இவரின் பல்வேறுபட்ட
பொதுச்சேவைக்கு மிகவும் பக்கபலமாக இருந்திருகிறது.
அரச மானியம் பெற்று மொன்றியலில் வேலையற்று இருந்த 24 தமிழ் மாணவ,மாணவிகளுக்கு ஆறுமாதம் "office automation,
"medical secretary"போன்ற பயிற்ச்சிகளை ஏற்படுத்திகொடுத்த பெருமையும் கனக்ஸ் அவர்களை சாரும்.
சுவாமி விபுலாநந்தருக்கு கனேடிய மண்ணில் மாபெரும் விழா டொராண்டோவில் நடைபெற அயராது உழைத்தவர்களுள்
திரு.கனகசபாபதி அவர்களும் ஒருவராகும்.
இப்படி பன்முகத் திறமையும்,ஆற்றலும் கொண்ட எமது மண்ணின் மைந்தன் திரு.கனகசபாபதி அவர்களை எமது இணையத்தளம்
வாழ்த்திப் பாராட்டுவதோடு அவரின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும்,உதவிகளையும் எமது மண்பிறந்த இளையோருக்கு
வழங்கவேண்டுமென்றும்,ஊரின் கல்வி மேம்பாட்டிற்கு ஆவன செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறது.
வாழ்க கனக்ஸ் அவர்களின் தமிழ் பணி.வளரட்டும் இவரது கலை முயற்சிகள்.
அவர்களின் ஆற்றல்களையும்,அர்ப்பணிப்புகளையும்,படைப்புகளையும்,மக்களுடன் பகிர்ந்துகொண்டு
நமது ஊர்களுக்கு பெருமை சேர்ப்பதில் பெரும் பங்களிப்பை செய்கிறது எமது இணையத்தளம்.அந்த
வரிசையில் இம்முறை எமது ஊரின் மிக மூத்த கலைஞன் திரு.எஸ்.பி.கனகசபாபதி அவர்களை
அறிமுகம் செய்வதில் பெருமைகொள்கிறது.
மட்டுநகரின் தெற்கே 'ஊரென்றால் திருக்கோவில் ஊர் 'என வர்ணிக்கப்படும் பழந்தமிழ் கிராமத்தில்
நெய்தலும்,மருதமும் கொஞ்சிவிளையாடும் சித்திரவேலனின் கோவிலிருக்கும் மண்ணில்,கள்வடியும்
ஊராம் களுதாவளையின் அடியினைக்கொண்ட பூபாலகோத்திர,பூபாலபிள்ளை அவர்களுக்கும்,
சுந்தரம்மாவிற்கும் மகானகப் பிறந்தார் கனகசபாபதி.கல்கிதாசன் என்பது புனைபெயர்'கனக்ஸ்'என்பது
கனடாப் பெயர்.
ஆரம்பகாலக் கல்வியை திருக்கோவில் மெதொடிஷ்த மிஷன்,தம்பிலுவில் மகாவித்தியாலயம் ஆகியவற்றிலும்,
கல்லூரிக் கல்வியை மட்/கல்லடி சிவாநந்த வித்தியாலயத்திலும் பெற்றார்.சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த
முதலாவது தங்கப்பதக்கத்தையும்,புலமைப் பரிசினையும் பெற்றார்.தொடர்ந்து சுவாமி விபுலாநந்தரின்
மருகனான சுவாமி நடராஜானந்தாஜியின் குருகுல வாழ்விலும் பயிற்சி பெற்றார்.மட்டக்களப்பின் பிரபல
தமிழ் பண்டிதர்களுடன் பழகும் வாய்ப்புக்கொண்டதுடன் பண்டிதர் வித்வான் வீ.சீ.கந்தையா அவர்களின்
முதல்தர மாணவனாக இருந்து தமிழ் கற்கும் வாய்ப்பினையும் பெற்றார்.அதேவேளை சமஸ்கிருதத்திலும்
ஈடுபாடுகொண்டு அதை சிவஸ்ரீ பூரண தியாகராஜ குருக்கள் அவர்களிடம் முறையாக பயின்றார்.இவரது
ஆங்கிலக் கல்விக்கு அத்திவாரமிட்டவர்கள் திரு.எஸ்.எம்.லீனா,திரு.யோகம் வேலுப்பிளை,திருஏ.ஈகனகரத்தினா
ஆகியோராகும்.
திருக்கோவில் கிராமத்தின் முதலாவது சிறப்புக் கலைப் பட்டதாரியான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்திலும்,
பேராதனை பல்கலைக்கழகத்திலும் தனது பட்டப் படிப்பினைப் பெற்றவர்.பேராசிரியர் சதாசிவம்,கலாநிதி கைலாசபிள்ளை
பேராசிரியர்கள் குலரத்தினம், வித்தியானந்தன்,ஜோர்ஜ் தம்பாபிள்ளை கைலாசநாத குருக்கள் ஆகியோரிடம் பயிலும்
பாக்கியம் பெற்றவர்
தமிழ்மொழி மீதும்,தமிழ்கலை,இலக்கியம்,கலைஞர்கள் மீதும் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் இயல்பாகவே
தாயக மண்ணின் தமிழ் கருவூலங்களாம் நாட்டார் பாடல்களிலும்,நாட்டுக் கூத்துகளிலும்,கருத்தையும்,கவனத்தையும்
கொண்டார்.இவரது 'கிராமத்து இலக்கியத்தில் நாட்டுப்பாடல்கள்'என்ற கட்டுரை 1966ல் மட்/சனசமூக நிலைய
கலைவிழாவின் சிறப்பு வெளியீடான 'கதிரொளி"என்ற மலரில் வெளிவந்தது.இந்த கலைவிழா அமைப்பாளர்கள்
மலர்குழு வரிசையில் திருவாளர்கள்,ச.கணேசன்,மு.ஆனந்தராஜா,டாக்டர் ம.பரசுராமன்,வித்வான் வி.சீ.கந்தையா
திருவாளர்கள் கா.நடராஜா,ஜே.எல்.திசவீரசிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இக் கட்டுரையின் இறுதியில்
"கிராமிய இலக்கியச் செல்வங்களை பாதுகாக்குமாறு"ஆக்கபூர்வமான வேண்டுகோளை திரு.கனக்ஸ் அவர்கள்
விடுத்திருந்தமை நோக்கத்தக்கது.
பன்மொழிப் புலமையும்,எழுத்தாற்றலும்,கவித்துவமும்,முகாமைத்துவமும் நிறைந்த இவர் மட்டு/காரேறு மூதூர்
காரைதீவுக் கிராமத்தில் உதித்த முத்தமிழ் வித்தகரும்,உலகின் முதல் தமிழ்பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தர்
பரம்பரையில் வந்த முருகப்பர் வீரக்குட்டி அவர்களதும்,திருக்கோவில் ஏகாம்பரம் அருளம்மா அவர்களதும் புத்திரி
கலாமணியை மணந்து கோபிவிநோபா,பகவத்கீதா,தேவிமனோகர் ஆகிய பிள்ளைகளுக்கு தந்தையானார்.
இவர் கொழும்பு,கண்டி,பேராதனை,கல்முனை,அம்பாறை,வாழைச்சேனை,மட்டக்களப்பு முதலான இடங்களில்
வசித்து கடமைபார்த்தபின்பு,இந்தியா ,ஈரான்,ஜேர்மனி முதலான இடங்களிலும் வாழ்ந்து தற்சமயம் குடும்பத்துடன்
கனடாவில் வசித்து வருகிறார்.
இலங்கையில் இருக்கும்போது அரச எழுதுவினைஞர் சங்க செயற்குழு உறுப்பினராகவும்,கல்முனை கிளை
அமைப்பாளராகவும்,செயலாளராகவும்,திருக்கோவில் திருஞானவாணி முத்தமிழ் மன்ற செயலாளராகவும்
உதயசூரியன் கலாமன்ற அமைப்பாளர்களில் ஒருவராகவும்,பேராதனை கமத்தொழில் திணைக்களத்தின்
தமிழ் இலக்கிய மன்ற அமைப்பாளர்களில் ஒருவராகவும்,படிப்பாக பொறுப்பாளராகவும் இருந்து தமிழுக்கு
தன்னால் முடிந்த சேவையினை ஆற்றியுள்ளார்.1960 முதல் பத்திரிகைகளிலும்,சஞ்சிகைகளிலும் எழுத
தொடங்கினார்.உள்ளதை யாருக்கும் அஞ்சாமலும் எழுதுவதும்,பேசுவதும் இவரது குணாம்சமாகும்.
கனடாவில் மொன்றியலில் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழ் ஒன்றியத்தின் துணைத் தலைவராக இருந்ததுடன்
"தமிழ் எழில்"என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இருந்தவர்."தமிழ் எழில்"தான் கனடாவில் முதல்
வெளிவந்த தமிழ் இதழாகும்.தொடர்ந்து கனடா தமிழ் கலாச்சாரசங்கத்தின் தலைவராகவும்,உலகத் தமிழ்
பண்பாட்டியக்க கியூபெக் கிளையின் தலைவராகவும்,மட்/சிவானந்த வித்தியாலய வடஅமெரிக்க கிளையின்
செயலாளராகவும்,தமிழ் நாடு பெருங்கவிக்கோ டாக்டர் வா.மு.சேதுராமன் நிறுவிய பன்னாட்டு தமிழுறவு
மன்ற கியுபெக் மாநில அமைப்பாளராகவும்,மட்டக்களப்பு பாடும் மீன்களின் அமைப்பாளர்களில் ஒருவராகவுமிருந்து
கடல்கடந்த தேமதுரத் தமிழுக்கும்,தமிழர்க்கும் துணை போந்தார்.
1970ல் அழகிய "திருஞானவாணியும்"1976 ல் "அறப்போர் அரியநாயகமும்"இவரது ஆரம்பகால படைப்புகளாகும்.
அப்போதிருந்தே "நித்தமும் உழைப்போம் முத்தமிழ் காப்போம்"என்ற தனது எண்ணத்தில் எழுந்த சேவை
தமிழுக்கு தேவை என உணர்ந்து செயட்படட் தொடங்கினார்.அதனால் வீரகேசரி,தினகரன்,சுதந்திரன்,எழுச்சி,
செந்தாமரை,மஞ்சரி,தாயகம்,தமிழ்பணி முதலான பத்திரிகை,சஞ்சிகைகளில் எழுதலானார்.
கவிஞர் காசி ஆனந்தனின் நெருங்கிய நண்பராக இருக்கும் திரு.கனக்ஸ் அவர்கள் காசியின் சில கொள்கைகளில்
உடன்பாடில்லாதவர்.இருப்பினும் நீண்ட கால நண்பர்கள்.ஒரே திணைக்களத்தில் கொழுப்பில் பணி புரிந்தவர்கள்.
1995ல் அமெரிக்காவின்"National Library of poetry" வெளியிட்ட "THE PATH NOT TAKEN"என்ற ஆங்கில
கவிதைக் களஞ்சியத்தில் இவர் எழுதிய "SINKING DREAM"என்ற அருமையான கவிதை இவரின் ஆங்கிலப் புலமைக்கு
ஓர் எடுத்துக்காட்டு."கல்கிதாசன் கவிதைகள்",தேரோடும் திருக்கோவில்"என்ற நூல்கள் மூலம் இவரது தமிழ்
கவிதைப் புலமையும்,எழுத்துத் திறமையும் புலனாவதை காணலாம்.அத்தோடு கலாநிதி கே.டி.செல்வராஜகோபால்
(ஈழத்துப் பூராடனார்)அவர்களுடன் இணைந்து "மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள்"
என்ற வரலாற்று நூலை தொகுத்து அதனை தன் சொந்த செலவிலே சென்னை மித்ரபதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார்.
இதன் இரண்டாம் பாகமும் வெளிவரவுள்ளது.
நாட்டுக் கூத்தில் நாட்டம் கொண்டவராகையால் மட்டக்களப்பின் வடமோடி நாட்டுக் கூத்தை கனடாவில் முதன் முறையாக
மொன்றியலிலும்,பின்னர் ஒட்டாவா பல்கலைக்கழகத்திலும் ஆடி அரங்கேற்றிய பெருமை உடையவர்.
மறைந்த ஈழத்துப் பூராடனாரை ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே நினைக்கும் இவர் முத்தமிழ் வித்தகருக்குப் பின்
பூராடனார் ஒருவரே முத்தமிழுக்கு முடிசூட்ட தகுதி பெற்றவர் என்று கூறிவந்தவர்.
கனேடிய தமிழ் வானொலி நிறுவனர் திரு.சிவசோதி (இளைய பாரதி)அவர்கள் அன்பு அறிவிப்பாளர் பி.எச்அப்துல் ஹமீத்
அவர்களை டொராண்டோவுக்கு அழைத்த நேரம் அவருடன் தொடர்பு கொண்டு மொன்றியலில் அப்துல் ஹமீத் அவர்களுக்கு
மாபெரும் தமிழ் கலைஞன் என்ற வகையில் பலரின் எதிர்புகளுக்குமத்தியில் துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் ஒரு
மகத்தான பாராட்டு விழாவை நடத்திய பெருமையும் கனக்ஸ் அவர்களுக்கு உண்டு.அதேபோல் பேராசிரியர் கா.சிவத்தம்பி
டைரக்டர் பாரதிராஜா,டாக்டர் ஜனார்த்தனன்,மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன்,பாடகர் தீபன் சக்கரவர்த்தி முதலான
பிரமுகர்களையும் மொன்றியல் வாழ் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.கனடா தமிழ்கலாச்சார சங்க தலைவராக
இருந்த வேளையில் இவரது வலது கரம்போல் செயல்பட்ட அளவெட்டி சிறீசுக்கந்தராசாவின் துணை இவரின் பல்வேறுபட்ட
பொதுச்சேவைக்கு மிகவும் பக்கபலமாக இருந்திருகிறது.
அரச மானியம் பெற்று மொன்றியலில் வேலையற்று இருந்த 24 தமிழ் மாணவ,மாணவிகளுக்கு ஆறுமாதம் "office automation,
"medical secretary"போன்ற பயிற்ச்சிகளை ஏற்படுத்திகொடுத்த பெருமையும் கனக்ஸ் அவர்களை சாரும்.
சுவாமி விபுலாநந்தருக்கு கனேடிய மண்ணில் மாபெரும் விழா டொராண்டோவில் நடைபெற அயராது உழைத்தவர்களுள்
திரு.கனகசபாபதி அவர்களும் ஒருவராகும்.
இப்படி பன்முகத் திறமையும்,ஆற்றலும் கொண்ட எமது மண்ணின் மைந்தன் திரு.கனகசபாபதி அவர்களை எமது இணையத்தளம்
வாழ்த்திப் பாராட்டுவதோடு அவரின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும்,உதவிகளையும் எமது மண்பிறந்த இளையோருக்கு
வழங்கவேண்டுமென்றும்,ஊரின் கல்வி மேம்பாட்டிற்கு ஆவன செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறது.
வாழ்க கனக்ஸ் அவர்களின் தமிழ் பணி.வளரட்டும் இவரது கலை முயற்சிகள்.
நன்றி - கோவிலூர் செல்வராஜன்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!