அம்பாறை, கோமாரி பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, வெள்ளிக்கிழமை (18.12.2015) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.எம். ஹில்மி, வியாழக்கிழமை (17.12.2015) உத்தரவிட்டார்.
அம்பாறை போதைவஸ்த்து ஒழிப்பு அதிகாரிகள், புதன்கிழமை (16.12.2015) இப்பெண்ணைக் கைது செய்ய முற்பட்ட போது இவர் தப்பிச் சென்றிருந்தார்.எனினும், திருக்கோவில் பொலிஸார் தீவிர சுற்றிவளைப்பின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.
அம்பாறை போதைவஸ்த்து ஒழிப்பு அதிகாரிகள், புதன்கிழமை (16.12.2015) இப்பெண்ணைக் கைது செய்ய முற்பட்ட போது இவர் தப்பிச் சென்றிருந்தார்.எனினும், திருக்கோவில் பொலிஸார் தீவிர சுற்றிவளைப்பின் பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண்ணை, பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.எம். ஹில்மி முன்னிலையில் (17.12.2015) ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.