
இதனொரு அங்கமாக வீடுகள் கட்டப்பட்டு பூர்த்தி செய்ய முடியாத நிலையிலுள்ள 51 குடும்பங்களுக்கு சீமெந்துகள் வழங்கப்படுகின்றன' என்றார். இங்கு தெரிவித்த தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை அலுவலக முகாமையாளர் ஏ.ஏ.அஸீஸ் 'கடந்த அரசாங்கத்தின்போது தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மூலம் பொதுமக்கள் வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக வழங்கப்பட்ட கடனின்; வட்டி வீதம் 11 சதவீதமாக காணப்பட்டது. ஆனால், தற்போதைய அரசாங்கம்; வறிய மக்களின் வீடில்லாப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் மிகவும் குறைந்த வட்டி வீதமான 3.73 சதவீதத்திற்கு வீட்டுக் கடங்களை வழங்கவுள்ளது.
இந்த ஆண்டில் அம்பாறை மாவட்டத்திற்கு ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆண்டில் இரண்டாயிரம் வீடுகள் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. தற்போது வீடுகள் கட்டுவதற்கான தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்பட்ட கடன் தொகை இரண்டரை இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அம்பாறை மாவட்டத்தில் வீடுகள் இல்லாத குடும்பங்களின் தொகைகளை குறைக்ககூடியதாக இருக்கும்' என்றார்.