
இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று 12ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது திருக்கோவில் உதவிக் கல்வி பணிப்பாளர் க.பிரபாகரன் மற்றும் திருக்கோவில் கல்வி வலய யுனிசெப் திட்ட இணைப்பாளர் எஸ்.விவேகாணந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.