பாடசாலை சீருடைக்குப் பதிலாக பண வவுச்சர் வழங்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இன்று (9) விசேட அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சீருடை தொடர்பான பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், சீருடை பெற்றுக் கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கால வரையறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையில் செல்லுபடியாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.