Contact Form

Name

Email *

Message *

க.பொ.த.(சா/த.) பரீட்சை நாளை ஆரம்பம்..

நாட­ளா­விய ரீதியில் இவ்­வாண்­டுக்­கான கல்விப் பொதுத் தராதர சாதா­ரண தரப் பரீட்­சைகள் நாளைய தினம் ஆரம் பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் பரீட்­சைக்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூ…

Image
நாட­ளா­விய ரீதியில் இவ்­வாண்­டுக்­கான கல்விப் பொதுத் தராதர சாதா­ரண தரப் பரீட்­சைகள் நாளைய தினம் ஆரம்பிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் பரீட்­சைக்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­ய­டைந்­துள்­ள­தாக இலங்கை பரீட்­சைகள்திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது.

க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சை நாளை 8 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மாகி நாட­ளா­விய ரீதியில் அமைக்­கப்­பட்­டுள்ள 4670 பரீட்சை மத்­திய நிலை­யங்­களில் எதிர்­வரும் 17 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை வரை நடை­பெ­ற­வுள்­ளது.இப்­ப­ரீட்­சைக்கு இம்­முறை 664537 பரீட்­சாத்­திகள் மொத்­த­மாக தோற்­று­வ­தோடு இவர்­களில் பாட­சாலை பரீட்­சாத்­திகள் 403442 பேரும் தனிப்­பட்ட பரீட்­சாத்­திகள் 261095 பேரும் அடங்­கு­கின்­றனர்.

பரீட்சை நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இம்­முறை பரீட்­சைகள் திணைக்­களம் நாட­ளா­விய ரீதியில் 4670 பரீட்சை மத்­திய நிலை­யங்­களை ஸ்தாபித்­துள்­ள­தோடு இவற்­றுக்­கென 534 இணைப்பு மத்­திய நிலை­யங்­க­ளையும் ஸ்தாபித்­துள்­ளது. பரீட்சை கண்­கா­னிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நாட­ளா­விய ரீதியில் அரச உத்­தி­யோ­கத்­தர்கள் 41 ஆயிரம் பேர் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­வுள்­ளனர்.

இதே­வேளை இம்­முறை பரீட்சை மத்­தி­ய­நி­லை­யங்­க­ளாக ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள நிலை­யங்­களில் விசேட பரீட்சை நிலை­யங்­க­ளாக மெகசின் சிறைச்­சாலை, இரத்­ம­லானை, தங்­காலை, சிலாபம், மாத்­தறை, கொழும்பு ஆகிய இடங்கள் உள்­ள­டங்­கு­கின்­றன
விடைத்­தாள்கள் திருத்தும் பணிகள்

நாளை 8 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­படும் பரிட்சை எதிர்­வரும் 17 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் பரீட்­சைக்­கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு கட்­ட­மாக இடம்­பெ­ற­வுள்­ளன. இத­ன­டி­ப­டையில் முதலாம் கட்ட விடைத்­தாள்கள் திருத்தும் பணிகள் இம்­மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 05 ஆம் திகதி வரை இடம் பெற­வுள்­ள­தோடு இரண்டாம் கட்­டா­மாக மேற்­கொள்­ளப்­படும் மதீப்­பீட்டு பணிகள் பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் தீர்­மா­னித்தின் படி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இத­ன­டி­ப­டையில் பரீட்சை விடைத்தாள் மதிப்­பீட்டு பணிகள் 55 நக­ரங்­களை சேர்ந்த 87 பாட­சா­லை­களின் 108 மதிப்­பீட்டு நிலை­யங்­களில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

மாண­வர்­க­ளுக்­கான அறி­வு­றுத்தல்
நாளைய தினம் பரீட்­சைகள் நடை­பெ­று­வ­தை­ய­டுத்து பரீட்­சாத்­தி­க­ளுக்கு பரீட்­சைகள் திணைக்­களம் சில அறி­வு­றுத்­தல்­களை
வழங்­கி­யுள்­ளது. அந்­த­வ­கையில் பரீட்­சைகள் ஆரம்­பிக்கும் நேரத்­திற்கு முன்­பாக தமக்­கான பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு தனியார், 
பாட­சாலை பரீட்­சார்த்­திகள் வருகை தர­வேண்டும், பரீட்சை நிலை­யங்­க­ளுக்கு கையடக்க தொலை பேசிகள் மற்றும் தேவையற்ற உபகரணங்கள் கொண்டுவருவது தடைசெய்யப்பட்டுள்ளது, பரீட்சாத்திகள் பரீட்சை அனுமதியட்டை உட்பட தேசிய அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவருதல் வேண்டும். பரீட்சைகள் சட்டதிட்டத்திற்கமைவாக பரீட்சாத்திகள் பரீட்சையில் தோற்ற வேண்டும்.

You may like these posts