Contact Form

Name

Email *

Message *

சாரதி அனுமதிப்பத்திரத்தில் உடலுறுப்பு தானம்

வாகன விபத்துக்களின் போது உயிரிழப்போரின் உடல் அவயங்களை சுய ஒப்புதலின் பேரில் தானமாகப் பெற்றுக் கொள்வதற்கான சம்மதம் வாகன அனுமதிப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவிருப்பதாக சுகா…

Image

வாகன விபத்துக்களின் போது உயிரிழப்போரின் உடல் அவயங்களை சுய ஒப்புதலின் பேரில் தானமாகப் பெற்றுக் கொள்வதற்கான சம்மதம் வாகன அனுமதிப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவிருப்பதாக சுகாதாரம், போஷாக்கு மற்றும் உண்ணாட்டு மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டம் அடுத்த வருடம் முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன ஈரல், நுரை யீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய அவசியங்களே இவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை சுகாதார அமைச்சு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,

வாகன விபத்தில் மரணிப்போரின் சிறுநீரகம் உட்பட உடல் உறுப்புக்களை சுகாதார அமைச்சுக்கு சுயவிருப்பத்தின் பேரில் வழங்கும் ஒரு ஷரத்தை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பொது உட்படுத்த சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்தும் பொறிமுறை தொடர்பாக ஆராய்ந்து துரிதமாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பல ஆஸ்பத்திரிகளில் தற்போது அவயவங்களைப் பொருத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஓர் ஆஸ்பத்திரியில் ஒரு டொக்டரைப் பெயரிட்டு அவரின் கண்காணிப்பின் கீழ் அவயவங்களைப் பொருத்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக 19 டொக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்க ளுக்கு வாகனப் பற்றாக்குறை இருப் பதால் குத்தகை அடிப்படையில் இவர்களுக்கு வாகனங்களைப் பெற் றுக்கொடுக்குமாறும் அமைச்சர் உத்தரவிட்டார்.

சிறுநீரகம், ஈரல் பொருத்தும் விடயத்துடனான வழிகாட்டல்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன.

You may like these posts