அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகளின் உண்ணாவிரத போராட்டம் இன்று 3வது நாளாகவும் கிழக்கு மாகாண சபை முன்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
கிழக்கு மாகாண சபையினால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அரச நியமனங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் பல வாக்குறுதிகள் முதலமைச்சரினால் வழங்கப்பட்டிருந்தது. அதே போன்று நேற்றைய தினமும் முதலமைச்சருடனான பேச்சு வார்த்தை அவரின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் முடிவு ஒன்றை எட்டும் வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.