திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரு நபர்களில் ஒருவருக்கு 20,000 ரூபாயும் மற்றைய நபருக்கு 10,000 ரூபாய் அபராதமும் வித்திது அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் நேற்று செவ்வாய்க்கிழமை (23) தீர்ப்பளித்தார். திருக்கோவில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இரு நபர்களும் கைது செய்யப்பட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர்களை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே அவர் இவ்வாறு அபராதம் விதித்தார்.
சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த இருவருக்கு அபராதம்
திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரு நபர்களில் ஒருவருக்கு 20,000 ரூபாயும் மற்றைய நபருக்கு 10,000 ரூபாய் …