Contact Form

Name

Email *

Message *

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேருக்கு மயக்கம்

திருக்கோவில் வட்டமடு மேச்சல் தொடர்பாக உண்ணாவிரதப்   போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு மயக்கமுற்றதையடுத்து அவர்களுக்கு வைத்தியர்கள் சிகிச்ச…

Image
திருக்கோவில் வட்டமடு மேச்சல் தொடர்பாக உண்ணாவிரதப்   போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு மயக்கமுற்றதையடுத்து அவர்களுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
வட்டமடு மேச்சல்தரை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் தொடர்ந்து மூன்று தினங்களாக உண்ணாவிரதத்தில் 50 க்கு மேற்பட்ட கால்நடையாளர்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் இன்று மாலை 4.00 மணிக்கு மயக்கமடைந்ததையடுத்து அவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல பொலிசார் நடவடிக்கை எடுத்தபோதும் போராட்டக்காரர்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கு மறுப்புத் தெரிவித்தனர்
இந் நிலையில் பொலிசார் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் எம்.தமிழ்தாசன் தலைமையிலான வைத்தியகுழுவினரை அம்புலன்ஜ்வண்டியில் வரவழைத்து போராட்டத்தில் ஈடுபட்டு மயக்கமடைந்த 8 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது
இதேவேளை அவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்



















You may like these posts