Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலில் கால்நடை வளர்ப்பாளர்களின் உண்ணாவிரதம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

திருக்கோவில், வட்டமடு மேய்ச்சல் தரை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கிறது. மேய்ச்சல் தரை, விவசாய நடவடி…

Image
திருக்கோவில், வட்டமடு மேய்ச்சல் தரை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

மேய்ச்சல் தரை, விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று காலை 6 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளை சேர்ந்த கால்நடைவளர்ப்பாளர்கள் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

எனினும் இந்தப் பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலவிவருவதாகவும், இதுவரை உரிய தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும்  சம்பந்தப்பட்ட தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

மேச்சல்தரை பிரதேசத்தில் வேளாண்மை செய்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து கால்நடையாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்  http://www.battinews.com/2013/12/blog-post_2188.html






You may like these posts