Contact Form

Name

Email *

Message *

தம்பட்டை பகுதியில் கொள்ளையிட்டவர் என்ற சந்தேகத்தில் இளைஞன் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

(திருக்கோவில் சு.கார்த்திகேசு) திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் தம்பட்டைக் கிராமத்தில் 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தம்பட்டை பகுதியில் கொள்ளையிட்டவர் …

Image
(திருக்கோவில் சு.கார்த்திகேசு)
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் தம்பட்டைக் கிராமத்தில் 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தம்பட்டை பகுதியில்
கொள்ளையிட்டவர் என்ற சந்தேகத்தில் இளைஞன் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு.
இவர் அன்று காலை பெண் ஒருவரின் தங்கமாலை அறுப்பற்கு முற்பட்ட வேளையில் பொது மக்களால் மடக்கிப்பிடக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து அவ்விடத்துக்கு திருக்கோவில் பொலிசார் விரைந்த  போது பொது மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் சந்தேக நபரை பொலிசாருக்கு கையளிப்பதில் வாக்குவாதம் எற்பட்டது. காரணம் அன்று இரவு இவ்சம்பவம் சம்மந்தமாக பொலிசாருக்கு தொலைபேசியில் தகவல் வழங்கிய போது அவர்கள் அங்கு வரவில்லை என பொதுமக்கள் பொலிசார் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பின்னர் அக்கரைப்பற்று பொலிசார் அவ்விடத்துக்கு விரைந்து நிலைமையை சமாதானமாக கையாண்டு மின்கம்மத்தில் கட்டப்பட்டிருந்த சந்தேச நபரை மீட்டு திருக்கோவில் பொலிசாரிடம் கையளித்தனர்
இது சம்மந்தமான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts