Contact Form

Name

Email *

Message *

2753 உளவியல் ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்தத் திட்டம் - கல்வி அமைச்சர்

உளவியல் ஆலோசனை தொடர்பில் முறையான பயிற்சியைக் கொண்ட ஆசிரியர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளும் பணிகளை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோச…

Image
உளவியல் ஆலோசனை தொடர்பில் முறையான பயிற்சியைக் கொண்ட ஆசிரியர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளும் பணிகளை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உளவியல் ஆலோசனை தொடர்பில் புதிதாக 2753 ஆசிரியர்களை கல்விக் கட்டமைப்பிற்குள் ஈடுபடுத்துமாறு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சமூகங்கள் மத்தியில் பாடசாலை மாணவர்கள் பல்வேறு உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக இவர்களது கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளில் சிறந்த தொடர்பாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

இதற்கமைய 300ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். இவ்வாறான பாடசாலைகள் 3768 காணப்படுகின்றது.

தற்போது 1039 ஆசிரியர்கள் உளவியல் ஆசிரியர் சேவையில் தற்காலிக பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் தகுதிகளைப் பூர்த்தி செய்த பின்னர் உளவியல் ஆலோசகர்களாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.உளவியல் ஆலோசனை தொடர்பில் முறையான பயிற்சியைக் கொண்ட ஆசிரியர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளும் பணிகளை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். உளவியல் ஆலோசனை தொடர்பில் புதிதாக 2753 ஆசிரியர்களை கல்விக் கட்டமைப்பிற்குள் ஈடுபடுத்துமாறு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சமூகங்கள் மத்தியில் பாடசாலை மாணவர்கள் பல்வேறு உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக இவர்களது கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவற்றைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளில் சிறந்த தொடர்பாடல்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும். இதற்கமைய 300ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். இவ்வாறான பாடசாலைகள் 3768 காணப்படுகின்றது.

தற்போது 1039 ஆசிரியர்கள் உளவியல் ஆசிரியர் சேவையில் தற்காலிக பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் தகுதிகளைப் பூர்த்தி செய்த பின்னர் உளவியல் ஆலோசகர்களாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

You may like these posts

Comments