அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அண்மையில்
மீள்குடியேறி வாழ்ந்துவரும் தங்கவேலாயுதபுரம் தமிழ் மக்களை
சிரேஸ்ட்ட அமைச்சர் பி.தயாரத்னா முதல்முறையாக நேற்று நேரில் சென்று
பார்வையிட்டு மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார்.அவர் மக்களுடன் கலந்துரையாடும்போது வருவது மழைக்காலம் எங்களுக்கு ஒரு தகரத்தையாவது தாருங்கள் மற்றது யானைத்தொல்லை. ஆக்கி வைத்தசோற்றுப்பாளையைத் தூக்கிக்கொண்டு போகிறது. இங்கு மின்சாரம் இல்லை.தண்ணீர் இல்லை. எனவெ வசதி செய்து தாருங்கள் என்று மண்றாட்டமாகக்கேட்டனர்.பதிலுக்கு பேசிய அமைச்சர் தயாரத்னா வரலாற்றில் இன்றுதான் இங்குவந்துள்ளேன்.உண்மையில் நீங்கள் படும் கஸ்டம் பல. மின்சாரம் இல்லையென்ற
விடயம் இன்றுதான் தெரியும் .எனவெ. இனி இங்கு வருவதென்றால் மின்சாரம்
வழங்கும் திறப்பவிழாவில் தான் கலந்துகொள்வேன்
இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி குறைநிறைகளைக் கூறுவதையும் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி;.சகாதேவராஜா.







