Contact Form

Name

Email *

Message *

தம்பிலுவிலில் இடம்பெற்ற விநாயக சதுர்த்தி தீர்த்தம் - Photos

(Thulanch) தம்பிலுவில்லில் இடம்பெற்ற விநாயக சதுர்த்தி ஆழிப்புனலாடல். தம்பிலுவில அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவமானது, கடந்த ஆவணி 23ஆம் திகதி (201…

Image
(Thulanch)
தம்பிலுவில்லில் இடம்பெற்ற விநாயக சதுர்த்தி ஆழிப்புனலாடல். தம்பிலுவில அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவமானது, கடந்த ஆவணி 23ஆம் திகதி (2012.09.08) சனிக்கிழமை ஆரம்பமாகி, கடந்த 10 நாட்களாக திருவிழா நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, விநாயக சதுர்த்தியான இன்று புதன்கிழமை (2012.09.19) , பெருமானின் ஆழிப்புனலாடல்(சமுத்திர தீர்த்தோற்சவம்) இடம்பெற்றது. காலை 9 மணியளவில், சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, பிரதான வீதி, கிராம சபை வீதியூடாக இடம்பெற்ற சுவாமி ஊர்வலமானது, பொதுமக்களின் நிறைகுட மரியாதையை ஏற்று, காலை 10 மணியளவில், தம்பிலுவில் தாழையடி சிவனாலயத்தை வந்தடைந்தது. தாழையடி சிவனாலய முன்றலில், அத்திரதேவருக்கு திருமுழுக்கு - ஆராதனைகள் நிகழப்பெற்று, அடியார்களின் அரோகரா கோசம் ஒலிக்க, கடலில் தீர்த்தமாடல் இடம்பெற்றது. இதில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டனர். இன்று மாலை, ஆலயத்தில் நிகழும் ஊஞ்சல் பூசையைத் தொடர்ந்து, நாளை 20ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூசையுடன், உற்சவம் இனிதே நிறைவுபெற இருக்கிறது.










You may like these posts