(கோவிலூர் செல்வராஜன் )
எமது இணையத்தளத்தின் வளர்ச்சிக்கும், அதன் தொடர்ச்சிக்கும் புலத்தில் வாழும் பலரிடம் நாம்
சிலசமயம் ஆதரவு கேட்பதுண்டு. முன்னரும் ஒரு சிலர்
தங்கள் உதவிக்கரங்களை நீட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் நன்றி கூறி இருந்தோம்.
இம்முறை ஊரில் நடைபெற்ற திருக்கோவில் முருகன்
தீர்த்தோற்சவத்தின் போது நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும், புகைப்படங்கள் பிடித்து தளத்தில் சேர்ப்பதற்கும் சில உபகரணங்கள் தேவைப்படுகின்றது என்றும், நமதுமக்களிடம் உதவி கேட்கலாமா என்று தளத்தின் இயக்குனர் தம்பி என்னை
கேட்டிருந்தார். அதற்க்கமைவாக நான் ஒரு சிலரிடம்
செய்தியை பகிர்ந்துகொண்டேன். இரண்டுபேர் உடனடியாக உதவ முன்வந்தார்கள். முதலில்
தம்பிலுவிலை சேர்ந்த, லண்டனில் வதியும்,
திரு.பவகரன்.வன்னியசிங்கம் அவர்கள், இரண்டாவதாக
தம்பிலுவிலை சேர்ந்த லண்டனில் வதியும்
திருமதி.யோகமணி.பாக்கியராஜா அவர்கள். இவர்களுக்கு
இணையத்தளத்தின் சார்பிலும், படப்பிடிப்பு குழுவினர்
சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்தொகொள்ள வேண்டும். இந்த
இணையத்தளம் எமது பகுதி மக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. குறிப்பாக புலத்தில் வாழும் எம் மக்களுக்காக எமது பகுதி செய்திகள்,
கோவில் திருவிழாக்கள், மரண அறிவித்தல்கள், மற்றும்
முக்கிய நிகழ்வுகள் என்பனவற்றை உடனுக்குடன் வழங்க இத்தளம் முனைப்புடன் செயல்படுகிறது. இதில் உள்ள
சிரமங்கள், சிக்கல்கள் சில வாசகர்களுக்கு தெரிவதில்லை.எடுத்து சொன்னாலும் புரிவதில்லை
. உதவி கேட்கும்போது ஏதோ தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினை.என்று ஒதுங்க நினைப்பதும்,பல கேள்விகளை
கேட்டு,மனத்தைக் காயப்படுத்துவதும் சிலருக்கு உண்டு.
தயவு செய்து ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். இது
ஒரு பொது தொண்டு. எவரின் தனிப்பட்ட விசயமல்ல.
உதவியவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.
எமது இணையத்தளத்தின் வளர்ச்சிக்கும், அதன் தொடர்ச்சிக்கும் புலத்தில் வாழும் பலரிடம் நாம்
சிலசமயம் ஆதரவு கேட்பதுண்டு. முன்னரும் ஒரு சிலர்
தங்கள் உதவிக்கரங்களை நீட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் நன்றி கூறி இருந்தோம்.
இம்முறை ஊரில் நடைபெற்ற திருக்கோவில் முருகன்
தீர்த்தோற்சவத்தின் போது நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும், புகைப்படங்கள் பிடித்து தளத்தில் சேர்ப்பதற்கும் சில உபகரணங்கள் தேவைப்படுகின்றது என்றும், நமதுமக்களிடம் உதவி கேட்கலாமா என்று தளத்தின் இயக்குனர் தம்பி என்னை
கேட்டிருந்தார். அதற்க்கமைவாக நான் ஒரு சிலரிடம்
செய்தியை பகிர்ந்துகொண்டேன். இரண்டுபேர் உடனடியாக உதவ முன்வந்தார்கள். முதலில்
தம்பிலுவிலை சேர்ந்த, லண்டனில் வதியும்,
திரு.பவகரன்.வன்னியசிங்கம் அவர்கள், இரண்டாவதாக
தம்பிலுவிலை சேர்ந்த லண்டனில் வதியும்
திருமதி.யோகமணி.பாக்கியராஜா அவர்கள். இவர்களுக்கு
இணையத்தளத்தின் சார்பிலும், படப்பிடிப்பு குழுவினர்
சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் இன்னுமொரு செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்தொகொள்ள வேண்டும். இந்த
இணையத்தளம் எமது பகுதி மக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. குறிப்பாக புலத்தில் வாழும் எம் மக்களுக்காக எமது பகுதி செய்திகள்,
கோவில் திருவிழாக்கள், மரண அறிவித்தல்கள், மற்றும்
முக்கிய நிகழ்வுகள் என்பனவற்றை உடனுக்குடன் வழங்க இத்தளம் முனைப்புடன் செயல்படுகிறது. இதில் உள்ள
சிரமங்கள், சிக்கல்கள் சில வாசகர்களுக்கு தெரிவதில்லை.எடுத்து சொன்னாலும் புரிவதில்லை
. உதவி கேட்கும்போது ஏதோ தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினை.என்று ஒதுங்க நினைப்பதும்,பல கேள்விகளை
கேட்டு,மனத்தைக் காயப்படுத்துவதும் சிலருக்கு உண்டு.
தயவு செய்து ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். இது
ஒரு பொது தொண்டு. எவரின் தனிப்பட்ட விசயமல்ல.
உதவியவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.