திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஊர்கள் எல்லாம் புதுப்பொலிவுடன்
காட்சியளிப்பதை காண முடிந்தது. ஏழு வருடங்களுக்குமுன் எங்கள் ஊர்களை உருக்குலையச் செய்த "சுனாமி " என்று சொல்லப்படுகின்ற கடற்கோள், அன்று தீமை செய்திருந்தாலும், இன்று நன்மையே செய்திருக்கிறது."தங்கச் சுனாமி "
இது எங்களுக்கு " என்று பலர் சொல்லக் கேட்கமுடிந்தது.
அரசும், அரச சார்பற்ற அமைப்புகளும் அத்தியாவசியமான, ஆக்கபூர்வமான
செயற்பாடுகளில் கவனமெடுத்து பல காரியங்களை செய்திருப்பதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக A4 என்று சொல்லப்படும் பொத்துவில் -
மட்டக்களப்பு உ வீதி அழகாக, விசாலமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் பிரயாணத்தின்போது எந்த அசௌகரியங்களும் இருக்கவில்லை.
(வடிகால் சரியாக அமைக்கப்படவில்லை என்பது வேறு விடயம்)
எமது இணையத்தளத்தில் முன்பொருமுறை, எமது ஊர்பகுதி கடற்கரையை
அசுத்தம் செய்வதுபற்றியும், மணல் களவாடல் பற்றியும் கட்டுரைகள்
எழுதப்பட்டு, அதற்கான நடவடிக்கையும், ஊர் மக்களாலும், பிரதேச சபையாலும் எடுக்கப்பட்டிருந்தன. வெளி இடங்களில் இருந்து வருபவர்கள்
நமது ஊர்களைப்பார்த்து மகிழ்ந்து, பாராட்டிவிட்டுப் போகவேண்டும் இல்லையா ? எவ்வளவு அழகான ஊர்கள்...எப்படி அன்பான மக்கள் ..என்று
சொல்லிச்செல்லவேண்டும். குறிப்பாக தான்.திருக்கோவில் முருகன் சந்நிதி
வரும் வெளியூர் அடியார்கள் கோவிலடியில் இறங்கியதுமே ஒரு பரவச
நிலையை அடையவேண்டும். ஆனால் அப்படியொரு நிலையை அவர்கள்
அடைவார்களா என்ற கேள்வி இப்பொழுது எழுகிறது. காரணம் அங்குள்ள
கட்டாக்காலி கால்நடைகளின் அழிச்சாட்டினம்தான். இதைப்பற்றி ஒருவரும்
கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. திருக்கோவில் தீர்த்தோட்சவத்தின்
போதும் இந்தக் கட்டாகாலி மாடுகள், மிகவும் இடைஞ்சலையும், கஷ்டத்தையும் தந்ததை காணமுடிந்தது. பாதைகள், பிரதான வீதி போன்றவற்றை நாசப்படுத்தி ,கழிச்சலும், சாணமும், எருவுமாக ஒரே
அசுத்தமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. இரவில் சாரி சாரியாக
பிரதான வீதியால் இவை வருவதை காணமுடிந்தது. அதிகாலையில் கடைகளுக்கு முன்பாக இவை படுத்திருப்பதையும், எழுந்து வீதியால் போகும்போது சாணம் போட்டு வீதியை அசுத்தப்படுத்துவதையும் நாங்கள்
அங்கு இருந்தபோது அவதானிக்க முடிந்தது. இதுபற்றி ஊரில் பலரிடம்
கேட்டபோது, " திருக்கோவில் பிரதேச சபைதான் இதுபற்றி கவனமெடுக்க
வேண்டும், அவர்கள் இதுபற்றி ஒன்றும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை" என்று அங்கலாய்க்கிறார்கள்.
ஏன் இந்த கால்நடைகள் கட்டாக்காலிகளாக வீதிகளில் ? இந்தக் கால்நடைகளின் சொந்தக்காரர்கள் யார்? ஏன் பிரதேச சபை இந்த சொந்தக்
காரரை கூப்பிட்டு கண்டிக்கவில்லை? அல்லது தண்டனை கொடுக்கவில்லை?
ஊரையும், அதன் சுற்றுப்புறங்களையும் அசுத்தப்படுத்தும் இந்த ஆநிரைகளை
அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட சொந்தக்காரரை அழைத்து , அவர்களுக்கு
எச்சரிக்கை பண்ணி , கால்நடைகளை அதற்குரிய காலைகளில்,அல்லது
தொழுவங்களில் அடைக்க செய்து ஊரையும், வீதிகளையும் நல்ல முறையில்
பராமரிக்க திருக்கோவில் பிரதேச சபை அல்லது பிரதேச செயலகம் முன்வரவேண்டும் என்று ஊர்மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறது இந்தக்
கட்டுரை... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?
காட்சியளிப்பதை காண முடிந்தது. ஏழு வருடங்களுக்குமுன் எங்கள் ஊர்களை உருக்குலையச் செய்த "சுனாமி " என்று சொல்லப்படுகின்ற கடற்கோள், அன்று தீமை செய்திருந்தாலும், இன்று நன்மையே செய்திருக்கிறது."தங்கச் சுனாமி "
இது எங்களுக்கு " என்று பலர் சொல்லக் கேட்கமுடிந்தது.
அரசும், அரச சார்பற்ற அமைப்புகளும் அத்தியாவசியமான, ஆக்கபூர்வமான
செயற்பாடுகளில் கவனமெடுத்து பல காரியங்களை செய்திருப்பதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக A4 என்று சொல்லப்படும் பொத்துவில் -
மட்டக்களப்பு உ வீதி அழகாக, விசாலமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் பிரயாணத்தின்போது எந்த அசௌகரியங்களும் இருக்கவில்லை.
(வடிகால் சரியாக அமைக்கப்படவில்லை என்பது வேறு விடயம்)
எமது இணையத்தளத்தில் முன்பொருமுறை, எமது ஊர்பகுதி கடற்கரையை
அசுத்தம் செய்வதுபற்றியும், மணல் களவாடல் பற்றியும் கட்டுரைகள்
எழுதப்பட்டு, அதற்கான நடவடிக்கையும், ஊர் மக்களாலும், பிரதேச சபையாலும் எடுக்கப்பட்டிருந்தன. வெளி இடங்களில் இருந்து வருபவர்கள்
நமது ஊர்களைப்பார்த்து மகிழ்ந்து, பாராட்டிவிட்டுப் போகவேண்டும் இல்லையா ? எவ்வளவு அழகான ஊர்கள்...எப்படி அன்பான மக்கள் ..என்று
சொல்லிச்செல்லவேண்டும். குறிப்பாக தான்.திருக்கோவில் முருகன் சந்நிதி
வரும் வெளியூர் அடியார்கள் கோவிலடியில் இறங்கியதுமே ஒரு பரவச
நிலையை அடையவேண்டும். ஆனால் அப்படியொரு நிலையை அவர்கள்
அடைவார்களா என்ற கேள்வி இப்பொழுது எழுகிறது. காரணம் அங்குள்ள
கட்டாக்காலி கால்நடைகளின் அழிச்சாட்டினம்தான். இதைப்பற்றி ஒருவரும்
கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. திருக்கோவில் தீர்த்தோட்சவத்தின்
போதும் இந்தக் கட்டாகாலி மாடுகள், மிகவும் இடைஞ்சலையும், கஷ்டத்தையும் தந்ததை காணமுடிந்தது. பாதைகள், பிரதான வீதி போன்றவற்றை நாசப்படுத்தி ,கழிச்சலும், சாணமும், எருவுமாக ஒரே
அசுத்தமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. இரவில் சாரி சாரியாக
பிரதான வீதியால் இவை வருவதை காணமுடிந்தது. அதிகாலையில் கடைகளுக்கு முன்பாக இவை படுத்திருப்பதையும், எழுந்து வீதியால் போகும்போது சாணம் போட்டு வீதியை அசுத்தப்படுத்துவதையும் நாங்கள்
அங்கு இருந்தபோது அவதானிக்க முடிந்தது. இதுபற்றி ஊரில் பலரிடம்
கேட்டபோது, " திருக்கோவில் பிரதேச சபைதான் இதுபற்றி கவனமெடுக்க
வேண்டும், அவர்கள் இதுபற்றி ஒன்றும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை" என்று அங்கலாய்க்கிறார்கள்.
ஏன் இந்த கால்நடைகள் கட்டாக்காலிகளாக வீதிகளில் ? இந்தக் கால்நடைகளின் சொந்தக்காரர்கள் யார்? ஏன் பிரதேச சபை இந்த சொந்தக்
காரரை கூப்பிட்டு கண்டிக்கவில்லை? அல்லது தண்டனை கொடுக்கவில்லை?
ஊரையும், அதன் சுற்றுப்புறங்களையும் அசுத்தப்படுத்தும் இந்த ஆநிரைகளை
அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட சொந்தக்காரரை அழைத்து , அவர்களுக்கு
எச்சரிக்கை பண்ணி , கால்நடைகளை அதற்குரிய காலைகளில்,அல்லது
தொழுவங்களில் அடைக்க செய்து ஊரையும், வீதிகளையும் நல்ல முறையில்
பராமரிக்க திருக்கோவில் பிரதேச சபை அல்லது பிரதேச செயலகம் முன்வரவேண்டும் என்று ஊர்மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறது இந்தக்
கட்டுரை... சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?