ஒரு தசாப்த கால இடைவெளிக்குப்பின்,நான் ஊருக்கு சென்றிருந்தேன்.
நான் சென்றவேளையில் அங்கே காலபோக அறுவடை நடந்துகொண்டிருந்தது. வேளாண்மை வெட்டுவது ஆட்கள் அல்ல..
எல்லாமே இயந்திரமே செய்கிறது. ஒரு விவசாயக் கூலியின் தாக்கத்தியும்
வேலைக்கார கம்பும் துருப்பிடித்தும், ஒட்டடை பிடித்தும் ஒரு மூலையில்
கிடக்கிறது. வேளாண்மை வெட்டினவர்களும், சூடு போட்டவர்களும்
ஊரில் பிழைப்பில்லாமல் சோர்ந்துபோய் இருக்கிறார்கள். வேலை இல்லை.
வருமானம் இல்லை. இதை பார்த்ததும் எனக்குள் இந்த பாடல் பிறந்தது.
இதை எமது தளத்தில் பதிவுசெய்கிறேன்.
ஒரு விவசாயி பாடுவதுபோல்தான் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பாடல்.....
---------------------
வேலகாரன் கம்முமில்ல....
வெள்ளாம கயிறுமில்ல ...
களவட்டி பொங்கல் இல்ல-வயலில்
கதிரு பொறுக்க பெண்கள் இல்ல ..
காலம் மாறி போச்சி கந்தப்பா...நம்ம
கோலம் மாறி போச்சி ..கந்தப்பா ...
ரெண்டுபங்கு மூண்டுபங்கு
வெள்ளாம வெட்டின கைடா....
உப்பட்டி கூட்டிக் கட்டி..
கட்டுக்கட்டாய் கட்டின கைடா...
சூடு வைச்சி அழகு பார்த்து,,
கத்தைகட்டி முடியும் வைச்சி
முடியிலொரு கொடியும் பறக்க விட்டோம் கந்தப்பா-சூட்டு
அடியை சுற்றி வலமும் நாம வந்தோம் கந்தப்பா -இன்று
இடிவிழுந்த கதையாய் போச்சே ஏன்டா கந்தப்பா.....
அவுரியில ஏறிநின்று....
கைப்பெட்டி பிடிச்ச கைடா..
அரண்டரண்டு காத்தடிக்க
அழகாக தூத்தின கைடா...
கொம்புகட்டி..முறிச்சித்தூத்தி..
சாக்கெடுத்து அளந்துகட்டி...
மூடைகளாய் அடுக்கிப் போட்டோம் கந்தப்பா -இன்று
முதுகிலதான் குத்திப்போட்டார் கந்தப்பா-அறுவடை
மெசினக்கொண்டு மடுத்துப்போட்டார் கந்தப்பா....
=============================================================
இந்தப் பாடல் ஒரு விவசாயக் கூலி பயன்படுத்தும் சொல்லாடல்களைக்
கொண்டே எழுதப்பட்டுள்ளது.
=கோவிலூர் செல்வராஜன்=
நான் சென்றவேளையில் அங்கே காலபோக அறுவடை நடந்துகொண்டிருந்தது. வேளாண்மை வெட்டுவது ஆட்கள் அல்ல..
எல்லாமே இயந்திரமே செய்கிறது. ஒரு விவசாயக் கூலியின் தாக்கத்தியும்
வேலைக்கார கம்பும் துருப்பிடித்தும், ஒட்டடை பிடித்தும் ஒரு மூலையில்
கிடக்கிறது. வேளாண்மை வெட்டினவர்களும், சூடு போட்டவர்களும்
ஊரில் பிழைப்பில்லாமல் சோர்ந்துபோய் இருக்கிறார்கள். வேலை இல்லை.
வருமானம் இல்லை. இதை பார்த்ததும் எனக்குள் இந்த பாடல் பிறந்தது.
இதை எமது தளத்தில் பதிவுசெய்கிறேன்.
ஒரு விவசாயி பாடுவதுபோல்தான் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பாடல்.....
---------------------
வேலகாரன் கம்முமில்ல....
வெள்ளாம கயிறுமில்ல ...
களவட்டி பொங்கல் இல்ல-வயலில்
கதிரு பொறுக்க பெண்கள் இல்ல ..
காலம் மாறி போச்சி கந்தப்பா...நம்ம
கோலம் மாறி போச்சி ..கந்தப்பா ...
ரெண்டுபங்கு மூண்டுபங்கு
வெள்ளாம வெட்டின கைடா....
உப்பட்டி கூட்டிக் கட்டி..
கட்டுக்கட்டாய் கட்டின கைடா...
சூடு வைச்சி அழகு பார்த்து,,
கத்தைகட்டி முடியும் வைச்சி
முடியிலொரு கொடியும் பறக்க விட்டோம் கந்தப்பா-சூட்டு
அடியை சுற்றி வலமும் நாம வந்தோம் கந்தப்பா -இன்று
இடிவிழுந்த கதையாய் போச்சே ஏன்டா கந்தப்பா.....
அவுரியில ஏறிநின்று....
கைப்பெட்டி பிடிச்ச கைடா..
அரண்டரண்டு காத்தடிக்க
அழகாக தூத்தின கைடா...
கொம்புகட்டி..முறிச்சித்தூத்தி..
சாக்கெடுத்து அளந்துகட்டி...
மூடைகளாய் அடுக்கிப் போட்டோம் கந்தப்பா -இன்று
முதுகிலதான் குத்திப்போட்டார் கந்தப்பா-அறுவடை
மெசினக்கொண்டு மடுத்துப்போட்டார் கந்தப்பா....
=============================================================
இந்தப் பாடல் ஒரு விவசாயக் கூலி பயன்படுத்தும் சொல்லாடல்களைக்
கொண்டே எழுதப்பட்டுள்ளது.
=கோவிலூர் செல்வராஜன்=