Contact Form

Name

Email *

Message *

துயர் பகிர்வோம் ...திரு. ஜெயரத்தினம் . திவ்யநாதன் காலமானார்.

திரு. ஜெயரத்தினம் . திவ்யநாதன்  காலமானார்.(முந்நாள் பா .உ ) திருக்கோவிலை சேர்ந்த இவர், முந்நாள் அம்பாறை (திகாமடுல்ல )மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராவார். கொழும்பின் புறநகர் …

Image
திரு. ஜெயரத்தினம் . திவ்யநாதன்  காலமானார்.(முந்நாள் பா .உ )

திருக்கோவிலை சேர்ந்த இவர், முந்நாள் அம்பாறை (திகாமடுல்ல )மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினராவார். கொழும்பின் புறநகர் பகுதியான தெகிவளையில் வசித்துவந்த இவர், திடீரென்று சுகயீனமுற்ற பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல்
போகவே மரணம் அடைந்தார்.
அன்னார், காலம் சென்ற திரு.திருமதி ஜேம்ஸ்.ஜெயரத்தினம் அவர்களின்
இளைய மகனும், சியமளாவின் அன்புக் கணவரும், சுதன், சுகன்யா, சுவேதினி
(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், Rev.விவேகானந்தன் (கனடா)
திரவியநாதன் (இலங்கை) விவேகவதி(லண்டன்) ஆகியோரின் அன்பான
சகோதரரும், காலம் சென்ற திரு. காளிமுத்து, திருமதி.நாகம்மா காளிமுத்து
ஆகியோரின் அன்பு மருமகனும், திரு.பாலேந்திரன், (ஜெர்மனி ) காலம்சென்ற
திரு சுரேந்திரன், திரு.குலேந்திரன் (கண்ணன் ) ஆகியோரின் அன்பு மிக்க
மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் (25.08.2012 )சனிக்கிழமை அன்று கல்கிசை மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26.08.2012 ஞாயிற்றுக் கிழமை
பி.ப. 3.00 மணிக்கு கல்கிசை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி
கேட்கப்படுகிறார்கள்.

தகவல். திரு.பாலேந்திரன் (ஜெர்மனி) 0049224199849
                 திரு. குலேந்திரன் (இலங்கை)0091773001926

குறிப்பு: அமரர். திரு. ஜெ .திவ்யநாதன் அவர்கள் சிறந்த கல்வியாளனாகவும்,
                 நல்ல பேச்சாளனாகவும், ஒரு சிறந்த கலைஞனாகவும்,(குறிப்பாக
                 நாட்டுக்கூத்து கலைஞனாக) திருக்கோவில் மண்ணில் இருந்தவர்.
                 அன்னாரின் இழப்பினால் துயருறும் அவர்தம் குடும்பத்தாருடன்
                 எமது இணையத்தளமும் பங்குகொள்கிறது.
                 


You may like these posts