Contact Form

Name

Email *

Message *

மண்ணின் புது வாசம்

கால் புதைய நான் நடந்த என் மண்ணை ... கனகாலத்திற்கு பின்  நான் தரிசித்தேன்....... என் மண்ணின்  வாசமும்.... என் மக்களின் பாசமும்.... என்னை மகிழ்ச்சிப்…

Image
கால் புதைய நான் நடந்த

என் மண்ணை ...

கனகாலத்திற்கு பின் 

நான் தரிசித்தேன்.......

என் மண்ணின்  வாசமும்....

என் மக்களின் பாசமும்....

என்னை மகிழ்ச்சிப்படுத்தின....

கடற்கோள்  அனர்த்தத்திற்கு பின் 

கட்டிடங்களும், கடைத்தொகுதிகளும்....

கட்டிமுடிக்கப்பட் டு புதுப்பொலிவை தருகிறது...

சாலைகள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு  

போக்குவரத்திற்கு இலகுவாக இருக்கிறது.

ஆலயங்கள் அழகாக காட்சியளிக்கின்றன..

தேவாலயங்கள் புனரமைக்கப் பட்டுள்ளன...

பள்ளிக்கூடங்கள்..சந்தைகள் , பொது இடங்கள்...

விஸ்தரிக்கப்பட்டு, அழகாக இருக்கின்றன...

கடற்கரை , தென்னந்தோப்பு  எல்லாம் 

கண்களுக்கு இதமாக காட்சி அளிக்கின்றன...

மொத்தத்தில் ஊரின் வாசத்தை ...

ஒரு புது வாசமாகவே ..

என்னால் நுகர முடிந்தது.....
 
 



You may like these posts