Contact Form

Name

Email *

Message *

தமிழ்மக்கள் பேரினவாதிகளின் சின்னங்களுக்கு வாக்களிப்பது தமிழ்மக்களை அழிக்க வழங்கும் ஆங்கீகாரமாகும் -(நகுலன்)

(திருக்கோவில் நிருபர்)  தமிழ்மக்கள் பேரினவாதிகளின் சின்னங்களுக்கு வாக்களிப்பது தமிழ்மக்களை அழிக்க வழங்கும்; ஆங்கீகாரமாகும் இன்று தமிழர்களின் தாயக பூமியில்; தமிழ்மக்களின் …

Image
(திருக்கோவில் நிருபர்)

 தமிழ்மக்கள் பேரினவாதிகளின் சின்னங்களுக்கு வாக்களிப்பது தமிழ்மக்களை அழிக்க வழங்கும்; ஆங்கீகாரமாகும்
இன்று தமிழர்களின் தாயக பூமியில்; தமிழ்மக்களின் இனப்பரம்பலை குறைப்பதற்காக அரசாங்கம் அபிவிருத்தி என்றபேர்வையில் திட்டமிட்டு தமிழர்பாரம்பரிய பிரதேசங்களில் சிங்களமக்களை குடியமர்திவருகின்றது எனவே தமிழ்மக்கள் பேரினவாதிகளின் சின்னங்களுக்கு வாக்களிப்பது தமிழ்மக்களை அழிக்க வழங்கும்; ஆங்கீகாரமாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்டவேட்பாளர் வேல்முருகு புவனேந்திரன் (நகுலன்) தெரிவித்தார்

தம்பிலுவில் பிரதேசத்தைச்சோந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்டவேட்பாளரான வேல்முருகு புவனேந்திரன் (நகுலன்) அவரது இல்லத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நேற்று சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து பேசகையில்
தமிழ்;மக்களின் தாயக பூமியான இணைந்த வடகிழக்கை பிரித்து கிழக்கில் அரசு அதிகாரத்துடன் ஆட்சியமைத்து அந்த ஆட்சி தமிழர்கள்தான் ஆழுவதாக சுயநல நயவஞ்சக தமிழ் தலையாட்டிப் பொம்மைகளிடம் வழங்கிவிட்டு சர்வதேசத்திற்கு தமிழ்மக்களே தமிழர்பிரதேங்களை ஆழுவதாக காட்டிக் கொண்டு தலையாட்டிப்பொம்மைகள் மூலம் தமிழர்கள் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமித்து சிங்களமக்களை குடியேற்றியதுடன் அரசநிலங்களையும் தமிழர்களின் பொருளாதாரங்களையும் சுற்றுலாத்துறை மற்றும் தேசிய அபிவிருத்தி என அரசாங்கம்; வாரிச் சுருட்டீக்கொண்டுள்ளது
தமிழர்களின் கல்வியையும் பேரினவாதிகளின் நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு நடாத்தப்பட்டுவருவதுடன் தமிழ்களின் அடையாளங்கள் வரலாறுகள் மூடிமறைக்கப்பட்டு வருவதுடன் வரலாற்று இந்து ஆலயங்களை பௌத்தவிகாரைகளாக மாற்றப்பட்டுவருகின்றுது எனவே தமிழ்மக்கள் எவரும்பேரினவாதிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடகாலமாக அநியாயங்களும் அட்டகாசங்களும் அடக்குமுறைகளும் படுகொலைகளும் நிலஆக்கிரம்புக்கள் இடம்பெற்றுருவதை தமிழ்மக்கள் அனுபவித்துவிட்டு பேரினவாதிகளின்; சின்னங்களுக்கு வாக்களிப்பார்கள் என்றால் தமிழ்மக்களை முற்றாக அழிக்க வழங்கப்படும் அங்கீகாரமாகும்
இன்று யுத்தம்முடிந்து 3 வருடங்களுக்கு மேலாகியும் அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தங்கவேலாயுதபுரம் ,கஞ்சிக்குடியாறு, சாகாமம், தாமரைக்குளம் போன்ற 1200 குடும்பங்களை மீள்குடியேற்றப்படாமல் அந்தமக்கள் அல்லல்படுகின்றனர் ஆனால் தங்கவேலாயுதபுரம் ,கஞ்சிக்குடியாறு பிரதேசத்தில் சுயமாக குடியேறிய சில குடும்பங்களை வைத்து சில கிழக்குமாகாணசபை அமைச்சர்கள் மீள்குடியேற்றி விட்டோம் அந்த மக்களின் வழ்வாரத்தை மேம்படுத்த விவசாயம் செய்ய தண்ணீர்பம்கள் முட்கம்பிகள் வழங்கியுள்ளோம் கிணறுகள் அமைத்துத்திருக்கின்றோம் என பத்திரிகைகளில் அறிக்கைகளை விட்டுவிட்டு தண்ணீர் இன்றி தோண்டிய கிணறுகளை அரைகுறையாக விட்டுவிட்டு அதன் பணத்தை ஏப்பமிட்டுள்ளனர் இது தான் தமிழ்மக்களுக்கு சில கிழக்குமாகாணசபை அமைச்சர்கள்; இந்த மூன்று வருடங்களாக செய்த சாதனையாகும்

இதேவேளை தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்துள்ளோம் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவோம் போன்ற அற்பசொற்ப ஆசைகளை காட்டி தமிழ்மக்களை ஏமாற்றி தமிழ்மக்கள் வாக்குகளை கொள்ளையிடமுடியும் எனவும் தமிழ்மக்களுக்கு செய்த அட்டூழியங்கள் படுகொலைகள் என்பவற்றை மறந்து சில தமிழ் நயவஞ்சகர்கள் நற்பாஷiயுடன் தமிழ்மக்களிடம் வாக்கு கேட்டு வீடுவீடாக ஏறியிறங்குகின்றனர் எனவே இவ் நயவஞ்சகர்கள் கூட்டத்தை தமிழ்மக்கள் எமது தமிழ்மண்ணில் இருந்து விரட்டியடிக்க தமிழ்மக்களின் வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் சின்னமான வீட்டு சின்னத்திற்கு அளித்து தமிழ்மக்களின் கனவை நனவாக்குவோம் என்றார்

You may like these posts

Comments