(அம்பாரை மாவட்ட நிருபர்)
திருக்கோவில் சாகாமம் வயல் பிரதேசத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள்;; திருடிச்செல்ல முற்பட்டபோது அதனைத்தடுத்த ஆடுகளின் உரிமையாரை முச்சக்கர வண்டியினால் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்செல்ல முற்பட்டபோது கொள்ளையர்களில் ஒருவரை ஆடுகளின் உரிமையாளர் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் வெள்ளிகிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
சாகாமம் வயல் பிரதேசத்தில் வழமையாக மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் கடந்த சிலகாலங்களாக காணாமல் போயுள்ளது இதனையடுத்து மேய்ச்சலுக்காக சம்பவதினமான வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு 10ம் கட்டை வயல்பிரதேசத்திற்கு சென்ற ஆடுகளை முச்சக்கரவண்டியில் சென்ற 4 பேர்கொண்ட கொள்ளையர்கள் ஆடுகளை பிடித்துக் கொண்டு செல்லமுற்பட்டபோது தடுக்க முற்பட்ட ஆட்டின் உரிமையாளரை கொள்ளையர்கள் முச்சக்கர வண்டியில் தாக்கிவிட்டு தப்பியோட முற்பட்டனர் இதன்போது கொள்ளையர் ஒருவரைஆட்டின் உரிமையாளர் மடக்கிப்பிடித்ததுடன் ஏனையோர் முச்சக்கரவண்டியில் தப்பியோடினர்
இச் சம்பவத்தையடுத்து மடக்கிப்பிடித்த கொள்ளையரை பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து பொலிசார் கொள்ளையரை கைது செய்ததுடன் கொள்ளையர்களின் தாக்குதலினால் காயமடைந்த ஆட்டின் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என பொலிசார் தெரிவித்தனர்
இதேவேளை வயல் பிரதேசத்தில் மேச்சலுக்கு செல்லும் ஆடுகளை வயல் பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டியில் வரும் கொள்ளையர்களால் திருடிச்செல்லப்படும் சம்பவங்கள் அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
சாகாமம் வயல் பிரதேசத்தில் வழமையாக மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் கடந்த சிலகாலங்களாக காணாமல் போயுள்ளது இதனையடுத்து மேய்ச்சலுக்காக சம்பவதினமான வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு 10ம் கட்டை வயல்பிரதேசத்திற்கு சென்ற ஆடுகளை முச்சக்கரவண்டியில் சென்ற 4 பேர்கொண்ட கொள்ளையர்கள் ஆடுகளை பிடித்துக் கொண்டு செல்லமுற்பட்டபோது தடுக்க முற்பட்ட ஆட்டின் உரிமையாளரை கொள்ளையர்கள் முச்சக்கர வண்டியில் தாக்கிவிட்டு தப்பியோட முற்பட்டனர் இதன்போது கொள்ளையர் ஒருவரைஆட்டின் உரிமையாளர் மடக்கிப்பிடித்ததுடன் ஏனையோர் முச்சக்கரவண்டியில் தப்பியோடினர்
இச் சம்பவத்தையடுத்து மடக்கிப்பிடித்த கொள்ளையரை பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து பொலிசார் கொள்ளையரை கைது செய்ததுடன் கொள்ளையர்களின் தாக்குதலினால் காயமடைந்த ஆட்டின் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என பொலிசார் தெரிவித்தனர்
இதேவேளை வயல் பிரதேசத்தில் மேச்சலுக்கு செல்லும் ஆடுகளை வயல் பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டியில் வரும் கொள்ளையர்களால் திருடிச்செல்லப்படும் சம்பவங்கள் அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!