தம்பிளுவிலில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் கொக்கு இறைச்சி வைத்திருந்த ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என். றிஸ்வான் திங்கட்கிழமை உத்தரவிட்டார்
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் குறித்த மதுபானசாலையை சோதனையிட்டபோது குளிர்சாதனைப் பெட்டியில் வைத்திருந்த அரைக்கிலோ கிராம் கொக்கு இறைச்சியை மீட்டதுடன் ஒருவரை பொலிசார் கைது செயதனர்
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை திங்கட்கிழமை பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஜ.என். றிஸ்வான் முன்னிலையில் ஆயர்படுத்தியபோது இவரை 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார் திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!