தம்பிலுவில் இந்து மாமன்ற 20 வது ஆண்டைச் சிறப்பிக்கும் முகமாக
பலரின் வேண்டுகோளுக்கு இனங்க தம்பிலுவில் இந்து மாமன்றம் தனது
சமய ,சமூகப் பணிகளை தனது 20வது ஆண்டில் மீண்டும் காலடி வைத்து ஆரம்பிக்கின்றது. இதற்கமைய மன்றத்தின் தலைவர் வ.ஜெயந்தன் அவர்களின் தலைமையில் இன்று 2012 - 04 - 25 திகதி மாலை 5.00 மணிக்கு சித்தி விநாயகர் ஆலய வீதியில் ஒன்று கூடல் நடைபெற்றது.
முக்கிய அறிவித்தல்
தம்பிலுவில் இந்து மாமன்றம் மூலம் சமய ,சமூகப் பணிகளை மேற்கொள்வதற்காக பழைய ,புதிய உறுப்பினர் அனைவரையும் எதிவரும்
2012 -04 -28 திகதி சங்கமன் கண்டி காட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் மேற்கொள்ள இருக்கும் சிரமதான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக
காலை 6.00 மணிக்கு கண்ணகை அம்மன் ஆலய வீதியில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்...






